பக்கம் எண் :
 
New Page 1

பொ: ஊர்ப்பெயர்கள் சுருங்கி நின்று வழங்க மருவும்பொழுது பெரும்பாலும்
மூன்றாம், இரண்டாம் எழுத்தின் மேல் ஐஏறப் பெறும்.

கோவன்புத்தூர் - கோவை; நாகப்பட்டினம் - நாகை
தஞ்சாவூர் - தஞ்சை; மன்னார்குடி - மன்னை
சிங்கப்பூர் - சிங்கை; புதுச்சேரி - புதுவை
திருநெல்வேலி - நெல்லை; அதிவீரராமப்பட்டினம் - அதிரை
பெரும்பாலும் இரண்டினும் மூன்றினும் வருவதுண்டேனும் சிறுபான்மை நான்கினும் மேலும் வரும்:
குடமூக்கு - குடந்தை; அடியார்க்குமங்கலம் - அடியர்க்கை

    திருச்சி(ராப்பள்ளி) போல அரி சிதைவும், உறையூர் - உறந்தை
(அறந்துஞ் சுறந்தை) என விரி சிதைவும் ஓரோர் வழிப்படுவன.

    முகவை, மதுரை இயல்பின் அமைந்தன.

    அரண்டாங்கி+அறந்தாங்கி; ஆர்க்காடு+ஆற்காடு.  போலும் பிழைவழக்குகள் பயனில.

    சோணாடு, மலாடு பெருந்திரிபின.

    புதூர், புத்தூர் என்பன இரு வேறூர் காட்டுதலும் உண்டு.

322. நூ: பல்வகை வழுவின் சொல்வகை பொருள்வகை
        செல்வகை நோக்கி நல்வகை கொளுவுக.

    பொ: பல்வகை வழுக்களான் அமையும் சொல்வகை பொருள்
வகைகளின் நடையறிந்து நல்லனவற்றைக்கொள்க என்பது.

அ. இடம் பிறழல் : வசை-வை (வைததனால் ஆகும் வசை) மை-மசை கசப்பு-கைப்பு (கல்யாணம்-கண்ணாலம்). (தடி) --> தசை-சதை; வாவல்-வவ்வால் நாவற்பழம் - நவ்வாப்பழம் (பிழை).
ஆ. இடை நழுவல் : கருப்பஞ்சாறூரனார் - கஞ்சாறனார்
ஒழுக்கங்கெட்ட - ஒழுக்(கங்)கட்(ை)ட
போகட்டான் - போட்டான்.
(குசேலர் காதை) போக + அட்டான்-போகட்டுக்கொண்டான்
மாதோ - போட்டான
நெருப்புப்பெட்டி - நெருப்(புப்)பெட்டி
கருப்புக்கட்டி - கருப்பட்டி.