வணங்குதல் |
- |
வணக்கம்; |
நல் |
- |
நலம்; |
திரும் |
- |
திரும்பு; |
பொருந் |
- |
பொருந்து |
என்னும் ஒற்றைவழக்காற்று திரிபுப்பொருளும், என்பு - எலும்பு;
மறதி - மறவி என்னும்
சொற்றிரிபும், செம்மாப்பு, மையாத்தல், சோகாப்பர்
என்னும் ஒருசொல் நீர்மை
இருசொற்பொருளும், அரவணைத்தல்,
நச்சரிப்பு, உட்கார்தல் என்னும் இரட்டைச்சொற்
பொருளும் நன்கொடை;
நல்லடக்கம், பணிவன்பு, பொதுவுடைமை (திரு. வி. க.) போலும்
புதுப்புணர்சொற்பொருளும்.
நீர் |
- |
நீத்தம்; |
வார் |
- |
வாக்குதல்; |
சேர் |
- |
சேக்கை; |
சார் |
- |
சாத்துபடி. |
எனத் திரிவலியியல்பும், |
தியாகம் |
- |
ஈகம் (ஈகை) |
பாட்டில் |
- |
போத்தல் |
யோகம் |
- |
ஓகம் |
டீ |
- |
தே(நீர்) |
என்னும் புதுவகைச் சொல்லாக்கமும்,
கால்நடை, பேர்வழி என்னும் சுற்றுப்பொருட்சுட்டும்.
பகர்ந்தான் - பகன்றான் என்னும் இருவேறு உரைக்குறிப்புச்
சொற்களைக் கூட்டிப் பகன்றான் என்றும்,
மேன்மேல் என்பதை மென்மேல்
என்றும் மாற்றும் குழப்படிச் சொற்களைத் தவிர்த்து - பதின்மூன்று
வகையையும் இங்கிடனாக அமைத்துக்கொள்க.
போலி
323. நூ: அஃறிணைப் பெயரில் சிற்சில இறுதி
மகரம் னகரமாய், லகரம் ரகரமாய்
மாறி வருவதைப் போலி என்பர்.
பொ:
அஃறிணைப் பெயர்களில் சிலவற்றின் இறுதியில் நிற்கும்
மவ்வொற்று னகரமாயும், லகரம் ரகரமாயும்
பொருள் மாற்றமின்றி எழுத்து
மாறிவரும்; அதனைப் போலி என்பர்.
ம்-ன்:
நிலம் - நிலன்; முகம் - முகன்; அகம் - அகன்; இடம் - இடன்; வலம்
- வலன்;
கடம் - கடன்;
பயம் - பயன்; சமம் - சமன்; புலம் - புலன்; நலம்
- நலன்; கலம் - கலன்; புலம் - புலன்; (மரம்
- மரன்).
ல்-ர்:
சாம்பல் - சாம்பர்; (பிடிசாம்பராய் - பட்டினத்தார்) பந்தல் - பந்தர்;
சுவல் - சுவர்; குடல்
- குடர்; திடல் - திடர்.
|