மற்று,-
வண்டு - வண்டர்; சுரும்பு - சுரும்பர்; நுனிக்கொம்பர் (கொம்பு -
திருக்குறள்) என வருவது புதிய
கூட்டு மாற்றமன்றி ஈட்டு மாற்றமன்று.
324. நூ: ஐஒலிப் போக்கில் அவ்வும் சிறுபால்
நவ்வொலி ஞவ்வுமாய் முதலிடை ஒலிக்கும்.
பொ:
ஒலிப்போக்கில் பெரும்பாலும் ஐக்கு மாற்றாக அவ்வும் சிறுபால்
நகரத்துக்கு மாற்றாக ஞவ்வும்
போலியாய்ச் சொல்லின் முதலிலும்
இடையிலும் ஒலிக்கும்.
மையல் - மயல், பையல் - பயல், மையிர் - மயிர், நிலையம் - நிலயம்,
பழைமை - பழமை, பேதைமை
- பேதமை. ஐந்திலே - அஞ்சிலே (கம்பரா)
செய்ந்நின்ற - செய்ஞ்ஞின்ற (தேவாரம்) நண்டு-ஞெண்டு,
நமன் - ஞமன்.
கவவுக்கை ஞெகிழாமல் (சிலம்பு).
அன்னை என்னும் சொல்லிடைப்பட்ட ‘ன’வ்வொலி நகரத்திரிபொத்து
அஞ்ஞை என வழங்கப்படும்.
இந்நூற்பாச் செய்தியை நன்னூல்,
‘சஞமுன் மட்டே அஐ ஒக்கும்’ என்பதும்
‘ஐ-தனிக்குறிலடுத்த யம்மெய்வழி ந-ஞ உறழும்’ என்பதும் நம்
எடுத்துக்காட்டுகளை அடக்காமை உணர்க.
போலிச் சொல் மூவிடத்து
வரும்போது முதலிடை கடையென அவ்விடப் பெயர் பெறும்.
பயன் திரிபு
325. நூ: திரியும் சிலபெயர் பிறிதொரு பொருட்பயன்
தருவ துண்டேல் தனிச்சொல் லாமே.
பொ:
பெயரின் திரிபுகளுள் சில வேறொரு பொருள் கொடுப்பின் ஒரு
தனிச் சொல்லாகவே இயங்கும்.
செல்வம்-செல்லம்,
செம்பு-சொம்பு, எள்+நெய்=எண்ணெய்.
கண்+ஆடி=கண்ணாடி, உருவு=உருவம் --> உருபு (வேற்றுமை உருபு)
முடிவு
(இறுதி) - முடிபு (தீர்மானமாய் இருத்தல்), எயிறு-(பல்) ஈறு-பற்கதுவுதசை.
நாற்றத்தினை நாத்தம் என்னும் வழக்குத் திரிபு தீ நாற்றத்தைக்
குதிப்பதாய்க் கொளலாமோ
எனின் ஆகாது நாற்றம் இழிபொருளுறினும்
மணம் நன்னாற்றத்தைக் குறித்தலின்.
|