நுங்கு - நொங்கு. இப்பொதுத் திரிபு வழக்கால் செம்மை வழக்கைப்
பிழைபடுத்தி செலவு - சிலவு;
தொகை - துகை; தொடை - துடை;
கொத்துவிளக்கு - குத்துவிளக்கு; எனத் திருத்திக்கூறும் மனப்பான்மையால்
திரித்துக்கூறுதல் மக்களின் சட்டாம் பிள்ளைப் பாங்கு.
தொளை
(தொளை தொட்டார்க்கு என்னை கொல்) = துளை தளிர்-
துளிர் முனி-நுனி எனப் பழஞ்சொல் திரிந்தது
மேலுணர்வே. செம்பு
-->
சொம்பு, புய்த்தல்
--> பிய்த்தல் என எ, ஒ வாகவும், உ - இயாகவும்
தம்முள் மாறல் ஒன்றிரண்டு.
இவைபோலும் அடிவழக்கன்றி ‘குடரோடு துடக்கிமுடக்கியிட’ என
இலக்கியத்துத் திரிபும் உண்டு. தொடக்கம்
என்பதினும் துவக்கம் என்பது
நன்றாதல் போல் தோன்றல் இவ்வுணர்வே. காவிரி எனுஞ்சொல்
இடையிகரம் எகரமாய் மாறுங்காலே பால(£)டை முதல் நெடில் நோக்கி
முதலயல் நீண்டதுபோலும் நீண்டு
காவேரி என நின்றது. இத்திரிபிற்குக்
கவேரன் என்னும் தந்தை பெயர் படைப்புக் கதையே.
ஆனால்
330. நூ: ஆயி னோடால் சேர்ந்திட ‘யி’கரம்
மாய நடக்கும் ஆனால் என்பது
தொடர்ப்பொருள் மாற்றும் இணைப்பிடைச் சொல்லே.
பொ:
ஆயின் என்னும் உருவமுடன் அவ்வுருவின்மேல் ‘ஆல்’
சேர்ந்திட யிகரம் விலக அமைந்தியலும் ஆனால்
என்னும் உருவமும் முன்
தொடரின் பொருளை மாற்றிப் பின் தொடரோடு இணைக்கும் பொருளுடைய
இடைச்
சொல்லாகும்.
(ஆய் என்பதனடி (313) ஆ+த்+இ=ஆதி; நளவெண்பா).
ஆயின் என்னும் சொல், ‘ஆ’ என்பதன் முதனிலையில் சார்ந்துள்ள
இன் இடை நிலையோ, ஐந்தன்
உருபோ அன்று. மற்று இடைநிலைப்
பட்டுவருவது ஆயினான் என்பதே. ஆ என்னும் வினையேறி வருதல்
உருபிற்கில்லை. இது முற்கால்.-
‘வேற்றுநா டாகா; தமவேயாம்: ஆயினால்
ஆற்றுணா வேண்டுவதில் (பழமொழி) எனவும்
‘பெண்-பொருளன்று; பொருளாயின் பூவே சாந்தே பாகே எண்ணையே
அணிகலனே என்றிவற்றாற் புனைய வேண்டா-தான்
இயல்பாகவே
நன்றாயின்’ எனவும், (களவியலுரை) அவ்வாறாயின்
|