பக்கம் எண் :
 

    சா : ‘எல்லே இலக்கம்’ (தொல்) என்பதுவோ பிறிதோ ஆகிய எல்
என்பதன் அடியாகப் பிறந்ததேயாதல் எல்லே இளங்கிளியே (திருப்பாவை)
எல்-எல்லா (காண்பென் காண் எல்லா) (எலுவ குறுந்தொகை) எல, ஏலே,
ஏல, ஏய் (வில்-விய்) வழக்கு.

        ஏல-ஏட (புகற்றுதல்-புகட்டுதல்) ஏடன், ஏடி.
        ஏ(ண்)டா, ஏ(ண்)டி-இன மிகுந்துவருவன.

    சீச்சீ சிறியர் செய்கை செய்தான் (பாரதி) சீ என்பது சீழ் என்பதன்
குறையாதல் எதிர்வழக்காய்ப் பிள்ளையர் மருத்துவமனையில் உளது என்று
கூறலால் கொள்க.  சீ-சீய்த்தற் பொருள்படுவது வேறு.  ஏ ஏ (தமிழச்சியின்
கத்தி) ஏ ஏ இஃதொத்தன் (கலி) விளிப்படு திரிபு.  ஏடு தூக்கி வந்த
பாங்கன் நட்புப் பற்றி வந்ததெனல் ஏடிக்குப் பொருந்தாமை உணர்க. 
அன்றி ஓவியன், கலைஞன் போன்றவற்றிற்குப் பெண்பால் இன்மை-
பெண்ணடிமைக்குறியே என்பார் கூற்று - மாந்தன், நண்பன் போலும்
பொதுச்சொற்கட்கின்மை நோக்கிப் பொய்யாய் நொற்வுற, புலவர், அறிஞர்
எனப் பலரீறே பண்டையின் விளக்கியமை போலும், ஏடர் என்னும் வழக்குமின்மையின் விடுக்க.

    ஏல-ஏட-அடே (தசை-சதை) அடேயப்பா: என்னும் வழக்கால் ஏட-அடா
திரிபின் இடைநடை அடே என்பதறிக. அஃது இருபாற்கும் அட(£)க்
கடவுளே! அடியாத்தா! (அட(£)ப்பாவி; அடிப்பாவி) எனத்திரிந்து நிற்கும்.
இதன்பின் காரன், காரி பெயரீறு ஆதல் போலும், வாங்குடா; நில்லுடா;
கொண்டாடி; பாருடி என வினைப்பின் ஆகும் தாழ்வழக்குற்றன.  அப்பாடா,
அம்மாடி-மிகத்திரி வழக்கின.

333. நூ: இரண்டிலொன் றன்மையைக் குறிப்பது அன்மை
        ஒன்றுமில் லாமையை உணர்த்தும் இன்மை.

    பொ : இரண்டு பொருளில் ஒன்று இன்றி மற்றதைக் குறிக்கும
 அன்மைச்சொல்; ஒன்றுமே இல்லாதமையைச் இன்மைச் சொல் உணர்த்தும்.

    நு : இருமறைச் சொற்களின் பொருள் வேறுபாட்டு நுணுக்கம்
கூறுகிறது.

    பண்பள வாய்க் கூறிய இன்மை இன்று, இல்லை என்றும் வரும். 
அன்மையும் அவ்வாறே.

    சா : ‘நினக்கு நல்லையும் அல்லை’,
         ‘நதியின் பிழையன்று.’