337. நூ: குழந்தைப் பிறப்பைக் குறிக்க, அம்மைபால்
தந்தைக்குத் தோன்றிய தென்பதே தக்கது.
பொ:
குழந்தை பிறந்த செய்தியைக் குறிப்பதற்கு இத்தாயிடத்தில்
இத்தந்தைக்குத் தோன்றியது என்று
கூறுவதே தக்கதாகும்.
சா:
கதிரவனுக்குக் குந்தியிடத்துத் தோன்றியவன் கன்னனாம்.
இது உடலியல் முறையில் தமிழில் அமையும் அறிவியல் தொடரென்க.
மற்று முன்னதும் இதுவும் இக்கால் ஈரிடத்தும் குவ்வுருபிட்டே
கூறப்பெறினும் குவ்வுருபு தன் பொருள்
வலியிழந்தே வருதலின்
வழுவமைதியாகக் கொள்ளலாம்.
1. |
ஆதிக்கும் பகவனுக்கும் பிறந்தவர் திருவள்ளுவர்
என்பது முழுப் பொய். |
2. |
கண்ண! யான் காற்றின் வேந்தர்க்(கு)
அஞ்சனை வயிற்றில் வந்தேன்-(கம்பராமாயணம்) |
338. நூ: முகவரி முறைமையில் தமிழுக் கியைய
ஊர்தெரு பெயரெனும் ஒழுங்கே நன்றாம்.
பொ:
முகவரி குறிக்கும் முறையில்-தமிழ்த் தொடர் அமைப்பிற்கேற்ப
ஊரை முன்னும் அடுத்துத்
தெருவையும், பின்னர் பெயரையும் எழுதும்
வரிசை ஒழுங்கே தொடருக்கு நன்றாம்.
பெறல்: |
தமிழ்நாடு, |
| |
(தமிழ்நாட்டுத் தஞ்சை மாவட்டத்தின் திருவாரூரில் உள்ள நடவாகனத்தெருவில் அமைந்திருக்கும் இயற்றமிழ்ப் பயிற்றகம் பெறல்)- |
|
தஞ்சாவூர் மாவட்டம், |
|
திருவாரூர், |
|
நடவாகனத்தெரு, |
|
இயற்றமிழ்ப்பயிற்றகம் |
இக்கால் வழக்கில் உள்ள முறைமைக்கு மாறாக - தலைகீழாக இதனைக்
கூறியது குழப்புவதற்கன்று. ஆங்கிலத்
தொடர் அமைப்பிற்கியைய வழங்கும்
இக்காலப் பெயர், தெரு, ஊர் முறையினும், தமிழ்த்தொடர்
மரபுமுறை
அஞ்சலகப்பணிக்கும் பிறவற்றிற்கும் எளிதாதல் காண்க. பிற்கூறும்
இரண்டும் தமிழ்த்தொடர்
|