பக்கம் எண் :
 

    வி: பிறபொருள் தொடர்பின்றித் தன்னியல்பாய் நிகழும் இவ்வினைகள் எதையும் செய்யாமை அறிக.

        ‘ஒரு பொருள் தனியெனும் மனிதரைச் சிரிப்போம்!’

-(பாவேந்தர்)

    என்ற பாட்டடியை மனிதரைப் பார்த்துச் சிரிப்போம் எனச்
சொல்லியைபு கொண்டும் காட்டலாம். அன்றி, ஈண்டுக்கூறலுறும் நகை
எள்ளல் பற்றியதாகலின் ‘மனிதரை இகழ்வோம் எனப் பொருளியைபு
கொண்டும் கூறலாம்.

பொது

392. நூ: எழுவாய் பயனிலை செயப்படு பொருள்கள்
        நழுவி வருவதும் தொடர்பினா லுண்டே.

    பொ: தொடர்களில் எழுவாயும் பயனிலையும் செயப்படுபொருளும்
பொருள் தொடர்பால் நழுவியும் வருவது உண்டு.

    சா: ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாம் செயல் (ஒருவன்)

    அறவுரைத் திருக்குறள் பெரிதும் எழுவாய் ஒளித்தே இயலும்.

    இங்கே வா; அதை வாங்கினேன். கதவைத் திற.

    முன்னிருப்பான் தொடர்பால் எழுவாய் மறைந்தது. இதனைத் தோன்றா எழுவாய் என்றும் மறைநிலை எழுவாய் என்றும் கூறுவர். பிறவுமன்ன.

செயப்படுபொருள்: (மதிப்பைக்) கொடுத்தால் பெறலாம் (நல்வினை)
கொடுத்தால் பெறலாம். (வாயிற்கதவைத்)
தட்டினால் திறக்கப்படும். (பெருவாழ்வுப் பேரின்பத்தைக்) கேட்டால் கொடுக்கப்படும்.
பயனிலை: கையில் காசு (கொடுத்தால்) வாயில் தோசை (கிடைக்கும்). கூடி வாழ்ந்தால் கோடி நன்மை (விளையும்).

    இவ்வாறு செயப்படு பொருளும் பயனிலையும் மறைந்து வருவது
பெரும்பாலும் விடுகதை, பழமொழி, (பொன்மொழி) மரபுத் தொடர்கள்
முதலியவற்றினே அமையும்.

மூவகை வினைமாற்றம்

393. நூ: செய்வினை செயப்படுவினையென, தன்வினை
        பிறவினை என்ன, உடன்பா டெதிர்மறை
        வினையென மூவகை வடிவுறும் வினையே.