நேர்:-”என்
சுடலை நீற்றை வணங்காமல் நாடு முற்றும் வாரி இறைக்க
வேண்டும்.” என்று நேரு எழுதியிருந்தார்.
நேரல்:-தன்
சுடலை நீற்றை வணங்காமல் நாடு முற்றும் வாரி இறைக்க
வேண்டுவதாக நேரு எழுதியிருந்தார்.
410. நூ: மாற்றும் போதில் நாளை இன்று
நேற்(று)எனும் நாட்பெயர் ஒருநாள் தள்ளியும்,
அண்மைச் சுட்டுகள் சேய்மை ஆகியும்
நிகழ்வெதிர் காலம் இறந்தும் நேரும்.
பொ: நேர்க்கூற்றை அயற்கூற்றாக்க, சில சொல் மாற்றும் பொழுதில்
நாளை, இன்று, நேற்று என்பன
தம் கால எல்லையில் இன்னும் ஒருநாள்
தள்ளியும், அண்மைச்சுட்டுச் சொற்கள் சேய்மைச்சுட்டுச்
சொற்களாகியும்,
நிகழ்காலமும் எதிர்காலமும் இறந்தகாலமாகியும் நேர்ந்துபடும்.
சா: |
நேர்:- |
நேரல்:- |
|
இது |
அது |
|
இவை |
அவை |
|
இன்று |
அன்று |
|
நாளை |
மறுநாள் |
|
நேற்று |
முன்னாள் |
|
இதனால் |
அதனால் |
|
இங்கு |
அங்கு |
|
இந்த |
அந்த |
|
இப்பொழுது |
அப்பொழுது |
|
நான், நீ |
அவன், தான் |
நேர்:-“போர்க்கு
இன்றுபோய் நாளைவா”. எனக் கோசல நாடுடை வள்ளல்
கூறினான்.
நேரல்:-போருக்கு
அன்றுபோய் மறுநாள் வருமாறு கோசல நாடுடை
வள்ளல் கூறினான்.
நேர்:-“நான்
இதை எடுத்து வருகிறேன்.” என்று உரிமை கொண்டாடினான்.
நேரல்:
அவன் அதை எடுத்து வருவதாக உரிமை கொண்டாடினான்.
நேர்:
“இங்கு வாருங்கள்; இந்தத் தட்டை வாங்குங்கள்.” என்று கோயிற்
கடையினர் நச்சரிக்கின்றனர்.
நேரல்:
அங்கு வரும்படியும், அந்தத்தட்டை வாங்கும்படியும் கோயிற்
கடையினர் நச்சரிக்கின்றனர்.
|