பக்கம் எண் :
 
411

411. நூ: பயனிலை வினைமுற் றனைத்தும் கால
       இடைநிலை பெற்ற துவ்விறு தொழிற்பெயர்
       உடன்ஆக என்பதைப் பெரும்பாலும் பெறுமே.

    பொ: பயனிலையாக வினைமுற்றுகள் எல்லாம் பெரும்பாலும் காலஇடை
நிலையைப் பெற்றும், துவ்விறுதிநிலை பெற்றுவரும்-தொழிற்பெயருடன் ஆக
என்பதைப் பெற்றும்மாறும்.

    சா:  ‘வருவேன்’ என்று - வருவதாக
     ‘வருகிறேன்’ என்று - வருவதாக, வந்ததாக
     ‘வந்தேன்’ என்று - வருவதாக.         (வருகிறதாக)

நேர்: ‘நாளை செல்வேன்’ என்று நந்தனார் நினைத்தார்.

நேரல்: மறுநாள் செல்லலாமென நந்தனார் நினைத்தார்.

    வி: நிகழ்காலச் சொல் பிறவிருகாலமாகவும் பொருள் சூழல் நோக்கி
மாறிவரும். இன்று என்னும் சொல் அவ்வாறே நேற்று, நாளை என்று மாறி
வருதலும் கொள்க, ‘இன்று’க்கு அன்று - என வருவது சுட்டுப் பற்றியது.

412. நூ: ஏவல் எல்லாம் எச்சம்முற் றாகும்.

    பொ: ஏவலாய் வரும் நேரல்கூற்றுகள் அயற்கூற்றாகும் போது
எச்சமாகவோ முற்றாகவோ மாறும்.

    சா:   1. “செய் அல்லது செத்துமடி.” என்றார் காந்தி.

2. செய்யவேண்டும்; அல்லது செத்துமடிய வேண்டும் என்று கூறினார் காந்தி

1. ‘தீமை செய்யாதீர்’ என்று அறநூல் கூறும்.

2. தீமை செய்யக் கூடாதென அறநூல் கூறும்.

413. நூ: முன்னிலை அண்மை நாள்எதிர் இவற்றைப்
        பின்னிலை யி்ன்றிச் சொல்லல் வேண்டின்
        சில்நிலை மாற்றம் செய்தல் இல்லை.

    பொ: முன்னிலை தன்மை இடச் சொற்களும் அண்மை சேய்மைச்
சுட்டுச் சொற்களும், நேற்று, நாளை, நாட்பெயர்களும் ஆகிய இவற்றைப்
பின்னணி உணர்ச்சி இல்லாமல் கூறும்போது சில நிலைகளில் மாற்றம்
செய்தல் இல்லாமல் நடக்கும்.

    நு: வாய்பாட்டு முறையில் எல்லாச் சொற்களையும் கண்மூடி
மாற்றிவிடாது பொருள் மாற்றும்போது நிகழும் சில இயல்பு நிலைகளைக்
கூறுகிறது.