பக்கம் எண் :
 
சா: 1. தமிழ்நூல்,
ஒழுக்கத்தின் விழுப்பம்.
  2. இந்தியாவில் குறித்த பொழுதில் செயற்படுவது குறைவு.
  3. 2003. 1 (தை) 2ஆம் நாள் திருவள்ளுவர் நாள்.
  4. ஒ. நா. உ. (U.N.O) திரு. வி. க.
  5. க. நா. அண்ணாத்துரை என முன்னெழுத்தும் சொற் சுருக்கத்திலடங்கும்.
  6. இந்திரா காந்தி.

   

முக்காற் புள்ளி (வரலாற்றுக்குறி)

 

417. நூ: சிறுதலைப்பு உள்ளெண் முக்காற் புள்ளியாம்
       அதனிடை வெளியே சிறுகோடு படுப்பின்
       தொகைவிரி செய்தி அறிவிப்பு, தேர்வுத்
       தொடர்வினாப் பின்வர லாற்றுக் குறியே.

 

    பொ: சிறு தலைப்பிற்கும், உட்பிரிவெண்ணிற்கும் முக்காற் புள்ளியாம்.

அதனிடையில் வெளிப்புறமாகச் சிறு கோடு இட்டால் - தொகைச் செய்தியை
விரித்தற்கும், அறிவிப்பிற்கும், தேர்வில் கீழ்க்காணும் வினாவிற்கும் பின்
வரலாற்றுக் குறியாக அமையும்.

 

சா: 1. முன்னுரை:
முடிவுரை:
  2. I 1:
  3. ஐந்து வகைப் பொறியாவன:
காது, கண், மூக்கு, நா, தோல்.

புலன் ஐந்து வகைப்படும்: அவை,
கேட்டல், காணல், மோத்தல், சுவைத்தல், ஊறு
என்பன. என்று இவ்வாறு வரின் முக்காற் புள்ளியே
இடம் பெறும்.

  4. இதனால் எல்லாருக்கும் அறிவிப்பதாவது:
  5. கீழ்க்கண்டவற்றுள் நான்கினுக்கு விடை இறுக்க: