பொ: தொடர்க் கிடையே சொல்லும், எழுத்தும் விடுபட்டதைக்
காட்டவும் ஓரிடத்தை வழிகாட்டிக்
கை காட்டவும் அம்புக்குறி பயன்படும்.
சா: சுப்பிரமணியன்
எடுப்பதூஉம் எல்லாம் வல்லது மழை.
429. நூ: பாட்டினும் உரையினும் பொருள்தெளி வுறுகண்
ணோட்டமும், நோட்டமும் கொள்ளுதல் பொருள்கோள்
பொ: பாட்டிலும் உரையிலும் மேலோட்டப் படிப்பில்
விளங்காதவிடத்துப் பொருள் தெளிவுறுதற்குச்
சொற்கண்ணோட்டமும்
கருத்து நோட்டமும் இட்டுப் பொருள் கொள்ளுதல் பொருள் கோள் ஆகும்.
சா: உரைச்சான்று விரியுமாகலானும், பாட்டுச்சான்று உரைச்சான்றுக்கு
எளிதாய முற்சான்றாமாகலானும்
பின்பாச்சான்றுகளே பரவிக்கிடப்பன.
உரைநடை பெரிதும் ஆற்றோட்டத்தினில் அடங்கும்.
430. நூ: அஃது
ஆற்றின் ஓட்டம், கொண்டுகூட் டிரண்டே
பொருள்கோள் இவ்விருவகை;
சான்றுபின் நோக்குக.
431. நூ: ஆற்றின் ஒழுகல்போல் இடையற வின்றித்
தோற்றும் சொற்பொருள் தொடர்வதாற் றோட்டம்
பொ: ஆற்றின் ஒழுகுதலைப்போல இடையில் ஆறுதலின்றி
தொடர்படுகின்ற சொல்லும் பொருளும் தொடர்ந்து
ஓடுவது ஆற்றோட்டப்
பொருள்கோள்.
சா: ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை; அந்நாடு
வேற்றுநாடாகா; தமவேயாம்: ஆயினால்
ஆற்றுணா வேண்டுவதில்
(பழமொழி)
சிறு தொடர்களால் அமைந்த இப்பாடல் - அறிவு - அஃது என்றும்,
நாடு - அந்நாடு என்றும் ‘ஆகா -
ஆம்’ என்றும், ஆம் - ஆயினால்
என்றும் சொல்லொடு சொல் தொடர்ந்து நீரலை உந்தி நெட்டோட்டம்
கொண்டவாறு போல அமைந்திருக்கும் அமைப்பு நோக்குக.
|