மற்றொன்று;-
ஆரஞ்சுப் பழத்தையும் தம்பி-நீ
ஆராய்ந்து பார்த்தபின் வாங்கு.
நீர்சுண்டி இருக்கவும் கூடும்-மிக
நிறையப் புளிக்கவும் கூடும்.
ஓரொன்றை உண்டுபார் தம்பி-அது
உகந்ததென்றால் பின்பு வாங்கு.
பாரெங்கும் ஏமாற்று வேலை-மிகப்
பரவிக் கிடக்கின்றது தம்பி.
-(இளைஞர் இலக்கியம்)
432. நூ: சொல்லும் தொடரும் எழுத்தும் கருத்துச்
செல்லும் வகையான் ஓரடி பலவடி
முன்பின் கொண்டு கூட்டல்பலவே.
பொ: சொல்லும் தொடரும் எழுத்தும்
- கருத்தோட்டத்தை ஒட்டி
ஓரடியிலோ பலவடியிடையிலோ முன்னும் பின்னுமாகக் கொண்டு கூட்டிப்
பொருள்பயக்கும் நிலைபல.
வி: எழுத்து எனமுற் கூறாதது
‘காவீதேஓமா டு டு டு டு டு (காளமேகம்) எனவருதல்
மிகச் சிறிதாதல் நோக்குடைத்து.
இக்கொண்டு கூட்டைப் பண்டை நூல்கள் - நிரல்நிரை, விற்பூட்டு, தாம்பிசை,
அளைமறி பாம்பு,
அடிமறி மாற்று, மொழி மாற்று, சுண்ணமொழி மாற்று
முதலியனவாகப் பெருக்கிக்கூறும். அவை கொண்டுகூட்டுள்
அடங்குமாறுணர்க.
சா: ‘இன்மை யரிதே வெளிறு-வெளிறு இன்மை அரிதே.
-(குறள்)
‘கரையாடக் கெண்டை கயத்தாட மஞ்ஞை
சுரையாழ அம்மி மிதப்ப-வரையனைய
யானைக்கு நீத்தும் முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை’
என்ற பழம்பாட்டு ஓரடிக்குள் சொல்மாறு பாட்டு.
‘இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே’
‘(வள்ளுவனைப் பெற்றதால்) பெற்றதே புகழ் வையகமே என்னும் பாவேந்தர்
பாட்டிறுதி தலைகீழாக தொடரியைபு
படுதல் நோக்குக.
|