பக்கம் எண் :
 
பெ

   

பொ: தன்னைக் குறிக்கும் தன்மையும் தனக்கு முன்னிருப்பதைக் குறிக்கும்
முன்னிலையும், தானும் முற்பொருளுமன்றி மூன்றாம் பொருளாய்
அண்மையிலோ, சேய்மையிலோ இருப்பதனைப் படர்ந்து சென்றுரைக்கும்
படர்க்கையும் என்று இடம் மூவகைப்படும்.

 

தன்மை

முன்னிலை

படர்க்கை

ஒருமை:

யான் நான்

வந்தேன்

நீ வந்தாய்

அவன் வந்தான்,

அவள் வந்தாள்,

இது வந்தது.

பன்மை:

நாங்கள் யாங்கள்

வந்தோம்

நீர் வந்தீர், நீங்கள் வந்தீர்கள்

அவர்கள் வந்தார்கள்

இவை வந்தன.

52. நூ: தன்மைப் பெயர்கள் யான் நான், யாம் நாம்
       யாங்கள் நாங்கள்என் றாறேஇருமை;
       நீ நீர் நீங்கள் என்பன முன்னிலை;
       வினாச் சுட்டடியாய்ப் பிறந்த பெயர்கள்
       தனிப்பெயர் பிறபெயர் படர்க்கைப் பெயர்வகை.

    பொ: மூவிடப் பெயர் வகையுள் தன்மையில் யான், நான் ஒருமையும்;
யாம், யாங்கள் நாம், நாங்கள் பன்மையும்; நீ முன்னிலை ஒருமையும், நீர்
நீங்கள் முன்னிலைப் பன்மையும், வினா சுட்டு அடியாகத் தோன்றிய
பெயர்கள், தனிப்பெயர்கள், பிறவகைப் பெயர்கள் படர்க்கையும் ஆகும்.

    நீ + இர் என்பது நீவிர், நீயிர் என்றுருப்பெற்று இலக்கிய வழக்கும்
பெற்று நீர் என்று இன்று நிற்றலின் விடுத்தேம்.  எனினும் நீர் என்பது
மதிப்பொருமை சுட்டுதல் நோக்கி அவ்விரண்டையும் முன்னிலைப்
பன்மையில் கொளலாம்.

    சா: படர்க்கைக்காட்டு:

        அவன்; எவள் - சுட்டு வினாவடிப் பெயர்.
        வழுதி; தென்னை - தனிப் பெயர்.
        வழக்கறிஞர்; ஆர்வலர் முதலியன பிறபெயர்.
        அவணர் (அவ்விடத்தர் - குறுந்தொகை) போல்வனவும் பிறபெயருள் அடங்கும்.  இவை பெயரடிப் பெயர்கள்.

53. நூ: கதையினும் பாட்டினும் ஒருவழிப் பேச்சினும்
       திணைபால் தெரியாத்தன்மைமுன் னிலைப் பெயர்
       எல்லாம் தான், தாம் என்பவும் பிறவும்
       பொதுப்பட வருதலின் பொதுப் பெயர் எனலாம்.