56. நூ: நடைமுறைத் தமிழில் காலங்குறிக்கும்
துணைவினைச் சொற்கள் தோன்றியவாறே
தனிப் பொதுக்காலம் மூன்றும் தம்மொடு
தனித்தனிக் கூடமேலும் ஒன்பதாம்.
பொ:
இற்றை வழக்குத் தமிழில் காலத்தைக் குறிக்கும் இரு, கொண்டு
என்னும் துணை வினைச் சொற்கள்
அடைவுபட்டிருக்கும் முறையானே
இறப்பு, நிகழ்வு, எதிர்வென்னும் தனித்துப் பொதுவிற் சுட்டும் மூன்று
காலங்களை ஒன்றொடொன்றைப் பிணைத்தால் மேலும் காலப்பிரிவு
ஒன்பதாகும்.
சா: |
இறப்பு |
= |
செய்தேன் |
|
இறப்பிறப்பு |
= |
செய்திருந்தேன் |
|
இறப்பு நிகழ்வு |
= |
செய்து கொண்டிருந்தேன் |
|
இறப்பெதிர்வு |
= |
செய்திருப்பேன் |
|
நிகழ்வு |
= |
செய்கிறேன் |
|
நிகழ்விறப்பு |
= |
செய்திருக்கிறேன் |
|
நிகழ்நிகழ்வு |
= |
செய்து கொண்டிருக்கிறேன் |
|
நிகழ்வெதிர்வு |
= |
செய்ய இருக்கிறேன் |
|
எதிர்வு |
= |
செய்வேன் |
|
எதிர்விறப்பு |
= |
செய்திருப்பேன் |
|
எதிர்நிகழ்வு |
= |
செய்து கொண்டிருப்பேன் |
|
எதிர்வெதிர்வு |
= |
(செய்ய இருப்பேன்). |
இடு என்னும் துணைவினை சில விடத்துப் பொருந்தும். எதிர்
வெதிர்வு போல்வன வழக்குறல் இன்றேனும்
தெளிவுபற்றிக் கூறப்பட்டது.
பரிதிமாற் கலைஞரும் எதிர்வுப் பிரிவுகள் பெருவழக்கு அல்லனவாதல்
பற்றிக் கூறாது விடுத்தார்.
பெயர்ச்
சொல்
57. நூ: உலகப் பொருள்களைப் பிரித்தறி யும்படிப்
பெயர்த்துக் குறிபெய்துரைத்தல் பெயரே.
பொ:
உலகத்துள்ள பொருள்களையெல்லாம் பிறவற்றினின்றும்
பிரித்தறியும் வகையில் பெயர்த்து அதனை
அறிகுறியாய் ஒருகுறியீடிட்டு
வழங்குவது பெயர்ச் சொல்லாம்.
சா:
மலை + மல் - ஐ வலிமையானது. பிற வலிதாய பொருளினும்
மிக்கது ஆதலின் பெயராயிற்று. (கண்டாரை
மலை
|