சா:
பாடினான்: முற்று; பாடி; பாடிய - எச்சம்
பாடுதல்: பாடல்; தொழிற்பெயர்.
62. நூ: செய்வதோர் வினையால் அப்போதணைவது
விணையால் அணையும் பெயரெனப் படுமே.
பொ:
இயற்பெயர் வேறொன்றுடையார் ஒருவினை செய்யுங்கால்
அப்போது புதிதாக நிலையில்லாமல் வினையடியாகச்
சார்ந்து குறிப்பது
வினையால் அணையும் பெயராம்.
சா:
‘புருடோத்தமனும் மனோன்மணியும் எதிரெதிர் நோக்கித் தம்
கனவில் கண்டவளும் வந்தவனும் இவரே
என உணர்ந்தனர்’ என்புழிக்
‘கண்டவள், வந்தவன்’ புதிதாய் நிலைப்பில்லாததாய் அமைதல் காண்க.
63. நூ: பெயரியல் பாயுருபேற்றலும் காலம்
வினையியல்போடு காட்டலும் இதற்குள.
பொ:
பெயரின் இயல்பாய் உருபேற்றலும் வினையின் இயல்போடு
காலங்காட்டலும் வினையாலணையும் பெயர்க்குண்டு.
சா:
நடந்தானை ஏத்தாத நாவென்னநாவே!
நாராயணா வென்னா நாவென்னநாவே!
(சிலம்பு)
நீந்துகிறவன்; தந்தவன்; காண்பவன் என வழக்காற்று
வினையாலணையும் பெயர் பெரிதும் நீந்துகிற
+ அவன் எனப்பிரிப்பது
போல் அமைந்திருத்தல் கருதத்தக்கது.
64. நூ: அறுவகைப் பெயர்கள் இடனி உவமையுள்
ஒன்றன் பெயரால் அதனோடியைந்தமற்
றொன்றை உணர்த்தல் ஆகுபெயரே.
பொ:
அறுவகைப் பெயர்களும், இடம்படுபொருட் பெயரும்
உவமைப்பெயரும் ஆயவற்றில் ஒன்றன் பெயரால்
அதனோடு தொடர்புடைய
மற்றொன்றைச் சுட்டி உணர்த்துவது ஆகுபெயராகும்.
பொருள் |
: |
(ஆட்டுக்காலைச்சுட்டி) இது இரண்டரையாடு எனல். |
காலம் |
: |
2இல் போகின்றேன். (பேருந்து) |
இடம் |
: |
தலை வெட்டிவா. |
சினை |
: |
தாடி வந்தார். |
பண்பு |
: |
அழுக்கு எடுக்க வெளுப்பார் வந்தார். |
தொழில் |
: |
பாய்ச்சல் விழுந்த சுண்டல். |
இடனி |
: |
விளக்குமார் இங்கே வா. |
|