பக்கம் எண் :
 
78

78. நூ: சில தனிச் சொல்லும் உருபாம் திறமே.

    பொ: சில தனிச் சொற்களும் உருபெனும் திறம்படும்.

        (இன்)

    சா: (2) சிவனைவிட முழுமுதற் கடவுட்டன்மை ஏற்றப்பட்ட

        (ஆல்)

    கடவுள் பிறர் இல்லை (நீக்கல்) (3) வாள் கொண்டு வெட்டினான்;

        (ஓடு)                     (கு)

    அவன் கூட நீயும்போ.  (4) சுவை பொருட்டு (ஆக)த் தமிழ் பயில்வார்
உடனே, நின்று, இருந்து, உடைய இடத்து என்பன சொல்லுருபுகளே;
எனினும் அவற்றின் பெருவழக்குப்பற்றி நூற்பாவாயின.

79. நூ: எட்டன் உருபே இயற்பெயர் ஈற்றின்
       திரிபு, குன்றல், மிகுதல், இயல்பு-அயல்
       திரிபும் ஆம்; பொருள் படர்க்கையோரைத்
       தன்முகமாகத் தானழைப் பதுவே.

    பொ: எட்டாம் வேற்றுமை உருபுகளாவன; விளியடைந்த பெயரீற்றின்
திரிதலும், கெடுதலும், மிகுதலும், இயல்பாதலும், ஈற்றயல் எழுத்துத்
திரிதலுமாகும்.  அவற்றின் பொருள், படர்க்கைப் பெயர்ப் பொருளைத்
தனக்கெதிர்முகமாக அழைப்பதால் ஆகிய விளிக்கப்படு பொருளாம்.

    சா: இது ‘முன்னோர் மொழியும் பொன்னேபோல் போற்றல்’ மாதராள்
- மாதராய்; (அழகன்) - அழக; அழகனே; அழகன்; அழகா - என்பன
எடுத்துக்காட்டு.

    இப்பொது விதியைத் விரித்துக்கூறின் பெருகுமாகலின் பயிற்சிக்குப்
பண்டை இலக்கியமும், இலக்கணமும் அடியாகுக என விடுத்தாம்.  (எனினும்
பொதுவில் உயர்திணை முப்பால் இறுதிகள் யவ்வாய்த் திரிதலும், ஓ, ஏ, ஆ
பெறலும் இறுதிகெடலும், ஈற்றிலும் ஈற்றியலிலும் உயிர்க்குறில் நீளலும் ஐ
இறுதி ஆய் ஆதலும் பொது மாற்றங்களாம்).

80. நூ: வினாச்சுட் டடியாம் படர்க்கைப் பெயர்கள்
       ஈரிடம் தாம்தான் பிறமேல் விளியா.

    பொ: வினாச்சுட்டடியாகத் தோன்றும் படர்க்கைப் பெயர்களும் பிற
இரண்டிடப் பெயராம் தன்மை முன்னிலையும், தாம், தான் என்னும் பொதுப்
பெயரும் பிற மேலமையும் ஐம்பால் இறுதியும் விளிக்கப்படா.