பக்கம் எண் :
 
117

117. நூ: ‘உயர்திணை உம்மைத் தொகை பலர் ஈறே.’

    பொ: உயர்திணை ஒருமையில் வரும் உம்மைத் தொகைகள் பலர்பால்
ஈறானர, கள் இறுதி கொள்ளும்.

    சா: சேர சோழ பாண்டியர்; மாணவ மாணவிகள்.

118. நூ: உவமைக்குரிய இருபொருட் சொற்கள்
       பெயரெச் சத்தின் வடிவுடைப் போற்சொல்
       விரிக்க நிற்பது உவமைத் தொகையே

    பொ: உவமானமாகவும், உவமேயமாகவும் வந்து உவமைப்
படவேண்டிய இருபொருளின் சொற்கள் தங்கட்கு இடையே போல் என்னும்
இடைச்சொல்லைப் பெயரெச்ச உருவத்தில் போல என்று விரித்துப்
பொழிந்துமாறு இணைந்து நிற்பது உவமைத் தொகையாம்.

    சா: தாமரை (போன்ற) முகம்; மழை (போன்ற) கை.

    புலிபோலப் பாய்ந்தான் எனத்தொடரில் வினையெச்சம் வரினும்
புலிப்பாய்ச்சல் எனத்தொகுப்பின் புலிபோலும் பாய்ச்சல் எனப்
பெயரெச்சமேற்கும்.

119. நூ: தன்மை அளவு வண்ணம் வடிவென்
       றின்னன குறித்தே எழும்பண் புத்தொகை.

    பொ: தன்மையும் அளவும், வண்ணமும், வடிவமும் என்றிவை குறிக்கும்
விடைகளொடு அவற்றின் பண்புச்சொல் இணைந்தெழுவது
பண்புத்தொகையாம்.

 

  சா: கருங்குதிரை - கருவண்ணக்குதிரை
    வட்டக்கல் - வட்டவடிவக்கல்
    இன்சொல் - இனியதன்மைச்சொல்
    ஒரு நிறைபொன் - ஒரு நிறையளவு பொன்.

    இவ்வாறு பண்பை விரிக்குங்கால் அதன் பண்புச் சொல்லை இட்டே விரித்தல் நன்றாம்.

    விரி: ‘ஆகிய’ என்னும் சொல்லையே அனைத்திற்கும் இட்டு விரித்தல்
உரையாசிரியர்களின் பொருந்தா முடிபு.  நன்னூலாரும் ‘பண்பை விளக்கும்
மொழிதொக்கன’ என இக்கருத்துப் பற்றியே கூறியுள்ளார். எண்ணல்,
நிறுத்தல், முகத்தல், நீட்டல் என அளவு நான்கு வகையாகும்.

120. நூ: பொதுப்பெயர் தனிப்பெயர் இரண்டும் பொருந்தின்
       இருபெயரொட்டுப் பண்புத் தொகையெனல்.