பொ: உருபேற்றிடும் வினைமுற்று பெயர்த்தன்மை பெற்றதும்
வினையால் அணையால் பெயரென்று அமைத்துக்
கொண்டதுபோல்
பெயர்களில் கால உணர்ச்சியை ஊட்டும் பெயரைக் குறிப்பு வினையென
அமைத்துக்கொண்டனர்
போலும் தண்டமிழ்ப் புலமைப் பண்டையார்.
நு: இந்நூற்பா வினைக்குறிப்பியல்பு உணர்த்து மாற்றான்
வினையாலணையும் பெயர் வரலாறு கூறுகிறது.
வி: பெயர்க்கும், வினைக்கும் உள்ள வேறுபாடு வேற்றுமை
உருபேற்றலும் காலங்காட்டலுமே என்பதனை-.
வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது.
நினையுங்காலைக் காலமொடு தோன்றும் (வினை) எனத் தொல்காப்பியர்
கூறியது கொண்டுணர்க.
இஃதேயன்றே முற்கூறியது (64). இதனானன்றே பூ
பெயர்ச் சொல்லென்றும், பூத்தல் தொழிற்பெயரென்றும்,
பூத்தது
வினைச்சொல் என்னும் கூறுபடுத்துவது நடந்தானை - நடந்தவனை எனத்
திரித்துக் கொண்டாங்குக்
குறிப்பு வினையைப் பெயராக்கிக் கொளலாம் எனக்
கூறியவாறு.
சார்பெழுத்து
359. நூ: முதலின் தோன்றியும் சார்ந்தும் வருவன
என்றிரு வகையாம் சார்பைக் கூறும்
இலக்கண நூல்கள் தொகைவிரி பலவாம்.
நு: சார்பெனக்கூறாது முற்கூறிய ஆய்தம் உயிர்மெய் தவிர்த்துப்பிற இலக்கண நூல்கள் தொகுக்கும்
எண்வகை எழுத்துத்திறத்தை எடையிடுகிறது.
பொ: அடிப்படை எழுத்துகளாகிய முதலெழுத்தினின்று தோன்றி
வருவன என்றும், முதலெழுத்துகளைச் சார்ந்து
வருவன என்றும்
இருவகையாகிய சார்பெழுத்துகளை இலக்கணநூல்கள் பலவகையாகத்
தொகைவிரியாக்கிக்
கூறும்.
முதலினின்று தோன்றியும், முதலினைச் சார்ந்தும் எனக் கூட்டுக.
|