வீடுதோறும் வாயிற்படி என்பதை வீட்டுக்கு வீடு வாயிற்படி என்பது
பழமொழி. அறிதொறறியாமை கண்டற்றால்
(திருக்குறள்)
‘இது காறும் காத்திருந்தேன்’ எனக்கால எல்லைகுறிக்கும்
சொல்லிற்குக்கால் அடியாதல் போல்
இதற்குத் தோல் (தோன்றல்)
அடியாகலாம்.
138. நூ: ஊமென் ஒலிக்குறிப்(பு) அசையொடு மேற்கொளல்
பொ:
ஊம் என்பது அசைப்பொருளும் மேற்கொண்டதைக் காட்டும்
பொருளும் தரும்.
சா:
புறனியார்க்கு ஊம்போடல் அசை. கேட்புக்குறிப்பு ஊம்-‘மேலும்’
என்பது. ஊம் + ஊம் - என்றிணைந்து
வருங்கால் உடன்பாடும், திரிந்து
ஊகூம் என்புழி மறுப்பும் வெளிப்படும்.
139. நூ: ஆமே இக்கால் உடன்பாடுரையசை.
பொ:
ஆம் என்பது இக்காலத்தே உடன்பாடாகவும் பேச்சிடை
அசையாகவும் வரும்.
சா:
ஆம் - இல்லை என்பது உடன்பாடு பேச்சிடை பிறர் கூறுவதை
ஆம்போட்டுக்கேட்டால் அது உரையசை ஆம்+ஆம்-ஆமாம்
என
இணைந்துவரினும் அத்தன்மைத்து. இக்கால் என்றது ஆகும் என்பதன்
செய்யுமென் இடைநழுவலாய் இச்சொல்
தோன்றியது இக்காலே எனற்கு.
ஊமொடு ஆமைச்சேர்த்து மொழியாமை அஃது ஒலிக்குறிப்பும் இஃது
பொருட்குறிப்பும் உடைமையே.
140. நூ: சரியெனல் உரையசை ஏற்றுக்கோடல்.
பொ:
சரிஎன ஒப்புவது உடன்பாடு. இஃது சரிசரி என அடுக்கி
வருங்கால் வலியுறுத்தல், உரைமுடித்தல்
போலும் குறிப்புணர் கருத்தாதலின்
தனித்துக் கூறப்பட்டது.
141. நூ: பிறவென் சொல்லடி ஐம்பால் தோன்றும்.
பொ:
பிற என்னும் சொல்லடியாக ஐம்பால் உருபும் ஏறி ஐம்பாற்
சொல் தோன்றும் என்பது.
சா:
பிறன்; பிறள்; பிறர்; பிறிது; பிற; பலவின் பிற என்பது இயல்பாய்
நிற்பதன்று; அகரம் ஏறியது.
142. நூ: பழமை இலக்கியப் பாங்கினில் பற்பல
மொழியசை உள; அவை முதுநூல் வழிப்படல்
பொ: பழைய இலக்கியங்களில் நயப்பாங்கொடு பலவகையான
சொல்வரிசைகள் உள்ளன. அவற்றைப்
பழைய நூல்கள் வழிச் சென்று
காண்க. (விரிவு) ‘விழைந்ததாலோ’; தில்; நடத்தரோ.
|