147. நூ: முதனிலை சந்தி திரிபே இடைநிலை
சாரியை இறுதி நிலையிவை ஆறே
சொல்லமை உறுப்பின் உள்ளமை வகையே.
பொ:
முதனிலை, சந்தி, திரிபு, இடைநிலை, சாரியை, இறுதி நிலை
இவை ஆறும் சொல்லாய் அமைந்த உருவத்தின்
உள்ளமைந்திருக்கும்
வகைப்பாட்டுறுப்புகளாம்.
சா:
சொல்லின் உறுப்பு வரிசை முறைப்படிக் கூறப்பட்டன.
|
|
மு |
|
ச |
|
இடை |
|
சா |
|
இறு |
நடந்தனன் |
= |
நட |
+ |
ந் |
+ |
த் |
+ |
அன் |
+ |
அன் |
|
|
மு |
|
இடை |
|
சா |
|
இறு |
|
|
நின்றனள் |
= |
நில் |
+ |
ற் |
+ |
அன் |
+ |
அள் |
|
|
|
|
ல் |
- |
ன் |
திரிபு. |
|
|
|
|
|
பெரிதும் திரிபும் சந்தியும் ஒரு சொல்லிடைப்படா.
வி:
நன்னூல் போலும் முன்னூல்களில் பகுதி விகுதி என்றதை இங்கு
முதனிலை இறுதிநிலை என்றது முன்பகுபதம்
என்றதை வட சொல் நீக்கப்
பகுசொல் என்றது போன்றது அன்று. பகுதியும், விகுதியும் பகு - வகு
அடியாத் தோன்றியதாய தமிழ்ச் சொற்களே. இவற்றைப் பொருள்
நயங்கருதியும் அம்மொழியிற்
பயிற்சி காட்டவும் பிரகிருதி - விகிருதி எனுஞ்
சொற்களின் திரிபு என்பார் கருத்து, உண்மையை
ஒளித்தலாகாது.
இங்கவற்றை விலக்கும் எண்ணமின்றேனும் பகுத்தலும் வகுத்தலும்
எவ்விடத்தென்னும்
ஐயம் தொடக்க நிலையாளர்க்கு இடராமாகலின்
இடந்தெளிவுறுத்தவும் முற்கையாட்சியுடைமையானும் முதனிலை,
இறுதிநிலை
என்னும்சொற்களே கையாளப்படுகின்றன அன்றிவேறில்லை.
148. நூ: முதனிலை இறுநிலை குறைவளவாக
மிகு நிலை ஆறும் மேம்படும் அவையே.
பொ:
அவ்வாறுறுப்புகளில் குறைவாக முதனிலையும் இறுதி நிலையுமாம்
இரண்டும் மிகுதியாய் ஆறும் வந்து பகு
சொல்லை வளப்படுத்தும்.
|
சா: |
அலுவலர் |
= |
அலுவல் |
+ |
அர் |
|
|
|
|
|
|
|
|
|
|
மு |
இடை |
இ |
|
|
|
|
|
|
|
|
செய்வான் |
= |
செய் |
+ |
வ் |
+ |
ஆன் |
|
|
|
|
|
|
வந்தனள் |
= |
வா |
+ |
ந் |
+ |
த் |
+ |
அன் |
+ |
அள் |
|
|
|
|
வா |
- |
வ |
- |
திரிபு. |
|
|
|
|
|