சா:
கொண்டனன், சென்றனள், விட்டனர், தின்றன, நடந்தனென்,
பயின்றனன், உண்டனம், நகைத்தனெம்,
வந்தனை, நின்றனிர்.
உண்பன், உண்பான், உண்பர், உண்ப, உண்பென், உண்பம், உண்பெம்,
உண்பீர் எனஎதிர்வில்வாராமை
காண்க.
178. நூ: நெடில்இறு நிலைபெறும் பாற்சா ரியைஇல.
பொ:
உயிர்நெடிலெழுத்தை முதலாகவுடைய இறுதிநிலைகள்
பெரும்பாலும் சாரியை இலவாய்ப் புணர்ந்து நிற்கும்.
சா:
அழுதான், தொழுதான், வணங்கினார், பெற்றேன், உற்றேம்,
மகிழ்ந்தோம், அடைந்தோம், தாராய்,
(உண்ணீர் உண்ணீர் என்றே
ஊட்டாதார்). முன்னிலை உம் எப்போதும் (கேளும்) சாரியை
பெறாமையையும்,
பலவின் அகரம் சிலவிடத்து ‘நல்லநல்ல அவை நல்ல’
(தேவாரம்), நல்ல போலவும், நயவ போலவும்
(புறம் 58) உள்ள, உள, இல்ல,
இல-எனச் சாரியை பெறாமையையும் ஈண்டு அடக்கிக் கொள்க.
179. நூ: அஃறிணை து,வைமுன் அவ்வே சாரியை.
பொ:
அஃறிணை ஒருமைக்குரிய ‘து’ வ் விறு நிலைக்கும் அஃறிணைப்
பன்மை வினையாலணையும் பெயர்க்குரிய
‘வை’ இறுதி நிலைக்கும்முன்
‘அ’கரம் சாரியையாம்.
சா:
விழுந்தது; விழுந்தவை.
வட + அ + து - வடாது; தும் முன் அப்பெறும் உறுதியால் வடத்து
என ஆகாமை காண்க (புறம்)
நட + ந் + த் + அ + து; விழு + ந் + த் + அ + வை.
அது, அவை என்றே பிரிப்பின் சுட்டுப் பெயராய் அப்பொருள்
காட்டாமையின் இவ்வாறு பிரிக்க என்றவாறும்
ஆம்.
180. நூ: இன் இடை நிலைமுன் துப்புணர் திரிபுறு
பொ:
இடைநிலையாகிய இன் முன்னர் இறந்தகால ‘து’ இறு நிலைவந்து
தானும் திரிந்து னகரத்தையும் திரித்து
அமையும் வடிவமே ‘று’ என்பது.
நு:
இந்நூற்பா ‘று’வ்வின் உண்மை கூறிற்று.
சா:
கூவிற்று, ஓடிற்று முதலியன.
கூவு + இன் + து (று) என்றே பிரித்தல் வேண்டும். இப்பிரிப்பு தகர
இடைநிலை உண்மையை விளக்குதல்
காண்க. ஈண்டிவ்வுண்மையறியாவிடின்
தெளிவுறப் பிரிக்க இயலாது.
|