விரி : அவரா ஈவார்? தம்பி இளையன்; அந்த அரசன்-எனப் பிரிந்து
நின்றும், நிலவுலகு (நிலவு+உலகு,
நில+உலகு) அண்ணா விழவு. (விழா -
விழவு; இழவு) எனப் பொருள் திரிந்தும். உடன்படுமெய் தோன்றாதென்க.
கிடைக்க இல்லை; முடிய இல்லை என்பன பிழை. இரண்டு உயிர்கள்
அடுத்து நிற்றல் இன்மையின் இரண்டையும்
உடன்படுத்த வருமெய்யெனப்
பொருள் கூறுவர். உடம்படுமெய் எனத்திரித்து இரண்டு உயிர் ஒருங்கு நில்லா
இயற்கையில் இடையில் ஓருடம்பாய் அடுத்த மெய் என்றும் கூறுவர்.
199. நூ: அஇசுட்டு ‘எ’வினாச் சார்ந்திட, உயிர்யா
எய்தின் வவ்வும் பிறவரின் அவையுமாம்.
பொ:
அ, இ சுட்டுகளையும் ‘எ’ என்னும் வினாவையும் உயிரெழுத்தும்
யாமுதல்பெயரும் அடையின் ‘வ’கர மெய்யும்,
பிறஎழுத்துவரின் அவையே
மிக்கும் அமையும்
சா :
அவ்வேழை; இவ்வோடை; எவ்வாடை; அவ்யாழ்; இவ்யானை;
எவ்யாறு; அவ்வீடு; இம்மரம்; எக்காலம்.
‘யா’ முதல் வருங்கால் அவ்வியாழ் என இகரம் பெற்று ஒலித்தலும்,
இக்கால் பெருவழக்காய அந்த
யானை என்னும் சுட்டுத்திரிபும் வரின்
அமைவனவே.
200. நூ: உயிர்வரின் உகரம் மெய்விட்டோடும்;
பெரும்பால்; சிறுபால் ‘யா’வரின் இய்யாம்.
பொ:
பெரும்பாலும் உயிர் முதல் மொழிவந்தால் நிலைமொழி இறுதி
உகரம் தான் ஏறிநிற்கும் மெய்யைவிட்டு
வருமுயிர்ச் சேருமாறு அகலும்.
சிறுபான்மையாக உகரமுன் யாமுதல்வரின் இகரமாய்த் திரியும்.
சா :
மாற்றுடை; இருப்பிடம்;
‘ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு’
‘நன்றாற்ற றுள்ளும் தவறுண்(டு); அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை’.
‘குழலினிதி யாழினிது’-
ஓடம் போக்கியாறு முதலியன. பெரும்பால் என்றது எதுவுயர்ந்தது
என்பதுபோல் கெடாதனவும் ஒருசில
உண்டு எனற்கு. சிறுபாலே
இலக்கியத்து வரக்கூடிய ‘யா’வின் இகரத்திரிபு காட்டுயானை என இயல்பாய்
வரினும் பிழையின்று.
நன்றியில் செல்வம்; பரிமேலழகியார்-என்பனவற்றுள் வருவனவற்றின்
முதலெழுத்து யகர மாத்திரிய
உகரம் இகரம் பெறுதல் சிலவாம்.
|