பக்கம் எண் :
 
New Page 1

    துவ்விறுதி அகரச் சாரியை பெற்றது.  ஆகும் என்ற மிகையான்
உள்ளன இல்லதுபோல் இரட்டலும் உண்டு என்க.

    நல்லன், வல்லன் என இவையொத்தன இரட்டவும் இவை இரட்டாமை
பற்றித் தனிக்கூறப்பட்டன.

மெய்ம்முன்னும், உயிர்முன்னும்-இடைமெலி மெய்வரல்

205. நூ: இருவழிக் கண்ணும் இருபதீற் றின்முன்
       வரும்வய ஞநம இடைமெலி இயல்பே.

    பொ: அல்வழி வேற்றுமைவழி என்னும் இருவழியிலும்,
மொழியிறுதியாகும் உயிரும் மெய்யுமாய இருபதெழுத்துகளின் முன்வருமொழி
முதலாக இடையின வயக்களும், மெல்லின ஞநமக்களும்வரின் இயல்பே
யாம்.

    சான்று தேர்க.

206. நூ: குறில்ய, தனிஐமுன் மெலிமிகும்; இயல்பிடை.

    நுதலுரை: மேலதற்கு ஒரு சிறப்பு விதி.

    பொ: இருவழியும் குறிலடுத்த யகரமெய் முன்னும், தனித்து உயிராயும்,
உயிர்மெய்யாயும் நிற்கும் ஐ முன்னும் மெல்லினம் வரின் மிகும். 
இடையினம் வரின் இயல்பாகும்.

 

சா:

செய்ந்நன்றி நெய்ம்மணம்.

பொய்வாழ்வு

 

ஐந்நூறு: மைந்நின்ற கண்டத்தன்.

கையாழ்.

207. நூ: மெய்யுயிர் முன்னே மெய்வரு திறத்தில்
       மெலியிடை ஒழிய வலிவரு வகையை
       இருவழிக் கண்ணும் காணுதல் இனியே.

    பொ: உயிர்முன் உயிரும், மெய்ம்முன் உயிரும் வருவகை முன்கூறி
இங்குத் தொடங்கும் மெய், உயிர்முன் மெய்ம்முதல் வரும் திறத்தில் -
மெய்யெனும் முப்பிரிவில் மெல்லினமும், இடையினமும் வந்து புணர்தல் கூறி
முடித்தமையின் இனி மெய், உயிர்முன் வலிவரும் வகையை இருவழியிலும்
காணுதலே எஞ்சி இருப்பது.

    விரி: இது புணரியல் வகையிடை நினைவுநூற்பா.  முன்
உரையாசிரியர்கள் நுதல் பொருள்கூறுதல் சுவடிக்காகலாம்.  அச்சு
நூல்களில் தலைப்பால் பிரித்தலின் இந்நினைவூட்டு
வேண்டா
வெனினும் தெளிவு பற்றியும் வல்லினப் புணர்ச்சியே
கருத்துட்கொளல் வேண்டிய விரிவுடையது என்பதை விளக்கவும் கூறினாம்.