பக்கம் எண் :
 
உய

உயிர்முன் வலிமெய்

208. நூ: இயல்பினும் விதியினும் நின்றஉயிர்முன்
        கசதப வரின்மிகும்; பெரும்பால் இருவழி

    பொ: இருவழியிலும் பெரும்பாலும் இயல்பாயும், விதியாயும் நின்ற
சொல்லிறுதி உயிர்முன் கசதப முதற்சொல் வரின் மிகுமாம்.

    விதியீறாவது: இயல்பாக உயிரீறு அல்லாத சொல் புணர்ச்சித் திரிபிற்காக
இறுதி குன்றி உயிரீறாக நிற்பது.

    எனக்கூறினான்-இயல்பீறு; மரப்பட்டை-விதியீறு, பலாப்பழம்,
அடித்தட்டை, வட்டக்கல்; மலைக்காற்று; ஒற்றைக்கண்ணன்.

    விரி: நன்னூல் நூற்பாவைத் திரித்ததென்னெனின் இருவழி என்னும்
இன்றியமையாச்சொல் சேர்க்கவும், பெரும்பால் என்பதனினே ‘விதவாதன’
அடங்கவும் விளங்கத்திரித்தேம்.  பிறவிடத்தும் திரித்தல்
கருத்துத்தெளிவு பற்றியே என்க.

209. நூ: அகர ஈற்றுப் பெயரெச்சங்கள்
        அஃறிணைப் பன்மை வலிவரின் இயல்பாம்.

    பொ: அகர இறுதியாய இறந்தகால, நிகழ்காலப் பெயரெச்சங்கள்
அஃறிணைப்பன்மை இவற்றின் பின்வரும்வலி இயல்பு.

    சா: வந்த பையன்; வருகின்ற பையன்.

    நல்ல பையன் என்ற பெயரெச்சச் சாயற் பெயரையும் மிகாமை கொள்க. 
அஃறிணைப்பன்மை-முற்றும், பலவென் பெயரும்.  வந்தன குதிரைகள், பல
குதிரைகள்.

210. நூ: பலசில என்பன தம்முன் தாம்வரின்
       முதல்’ல’ அகரம் கெடலும் திரிபும்
       இயல்பாய் நிற்பின் இயல்பும் மிகலுமாம்.

    பொ: பலசில என்னும் சொற்கள் தம்முன்னே தாம் வந்தால் முன்
சொல்லின் இறுதி அகரம் நீங்க லகர வொற்றாகவும், அது திரிந்து றகர
வொற்றாகவும் மாறலும், இயல்பாய் நிற்பின், இயல்பும் மிகுதலும் ஆம்.

        பல்பல; சில்சில; பற்பல; சிற்சில
        பலபல; சிலசில; பலப்பல; சிலச்சில

    விரி: ‘றவ்வாதல்’ என்னாது திரிபும் எனப் பொதுவிற் கூறியது
பிறசொல்லொடு புணருங்கால்-பன்மாண் கடும்பின் (புறம்) என