பக்கம் எண் :
 
னகரம

    னகரம் ஆதலின், னகர மாதல் மகரப் புணர்ச்சியில் அடங்குமெனில்
தனிச்சொல் விதியில் என்னாம் என்றும் ஐயம் அகற்றல் வேண்டுவதன்றோ.

    பல்கலைக்கழகம்.  பல்பழக்குவை (திருவிளை) இயல்பு.

211. நூ: பலபிற எல்லாம் உருபேற்குங்கால்
       அற்றே சாரியை: மேலினும் ஆகும்.

    பொ: பல, பிற, எல்லாம் என்னும் சொற்கள் வேற்றுமைப்
பொருளடைந்து உருபேற்குங்காலத்து அற்றுச் சாரியை வேண்டும்;
அதன்மேல் இன்னும் அடுக்கிவரும்.

    சா: பலவற்றை; பிறவற்றால்; எல்லாவற்றாலும் பலவற்றிற்கு;
பிறவற்றினது; எல்லாவற்றின்பாலும்.

212. நூ: “அத்தின் அகரம்அகரமுனை இல்லை”

    பொ: அத்துச் சாரியையின் முதலெழுத்தாகிய அகரம், அகர இறுதிச்
சொல்லிற் புணருங்கால் இல்லாது போகும்.

    மரத்திலை; செல்வத்துட் செல்வம்

    மேல்விதிச்சார்பில் அத்தின்மேல்-இன் மரத்தினிலை எனக் கொள்க.

213. நூ: அஃறிணை எதிர்மறை வினைமுற்றிறுதிஆ
        வலிவரின் இயல்பாம்; ஈறுகெட்ட
        எதிர்மறைப் பெயரெச் சத்(து)ஆ மிகும்;அவ்
        வினையெச் சம்மேல் இயல்பாய் முடியும்.

    பொ: அஃறிணைப் பலவின்பால் வினைமுற்றொடு எதிர்மறை உணர்த்தி
இறுதியில் நிற்கும்  ஆ, வலிவரின் இயல்பாம்.  ஈறுகெடாது நிற்கும்போது
வலிமிகாத பெயரெச்சம் ஈறுகெட்டால் வலிமிகும். அஃது ஈறுகெட்ட
எதிர்மறை வினையெச்சமாயின் வலிமிகாது முடியும்.

    சா: முற்று: ஓடா குதிரைகள்; பெ. எ. : ஓடாத குதிரைகள்.  ஈறுகெட்ட
எதிர்மறைப் பெயரெச்சம்: ஓடாக்குதிரை: ஓடாப் பூட்கை.

    ஈ.கெ.எ.ம.வி.எ: சென்றவிடத்தால் செலவிடா தீதொரீஇ(குறள்)

214. நூ: சுவைப்புளி, பூவழி வலிமெலி தோன்றும்

    பொ: சுவையைக் குறிக்கும் புளி, பூ இவற்றின் முன்வரும் வலி
மிகுந்தும் மெலிந்தும் தோன்றும்.