மிகாமையும் ஈங்கே கொள்க. மற்றது பெயரெச்சத்தின் இறுதியில்
அடங்குமேனும், காலங்காட்டாமையானும்
ஆறன் இனமாகலானும் அடக்கிக்
கொள்க. அவை முதலியன எழுவாயுள் அடங்கும். ‘எது’ பெரிதும்
தொடரிறுதியில்
வருதலான் கூறலின்று; சிலவிடத்து முன் வருமேல் சுட்டுச்
சார்பாக அடக்கிக் கொள்க. எது பெருமை?
220. நூ: பெரும் கரும் உயிர்வரின் பேர்கார் ஆகும்.
பொ :
பெரும், கரும் என்னும் பண்படைகள் உயிர் முதற் சொல் வந்து
புணரின் பேர், கார் என நீளும்.
சா:
பெரும் பேராசிரியர்; பேரறிஞர்; பெரும்புலவர்; காரா (பசு);
காரிருள்; கருங்குரங்கு.
இவ்வொலியியைபானே-வரு+ஆ+து=வாராது என்றாம்: “ருவ்வொடு
ஆப்புணரின் வராது என்றாம்.
மகர விறுதியாய்த் தோன்றினும் கரு, பெரு என்பனவே உண்மை உரு
ஆகலின் ஈண்டுக் கூறினாம்.
221. நூ: அதுஇது இரண்டும் உயிர்முதற் சொல்வரின்
அஃதிஃ தென்றும் பிறவரின் இயல்புமாம்.
பொ :
அது இது என்னும் இரண்டும் உயிர்முதற்சொல் வந்தால் அஃது
இஃது என்று தோன்றலும், பிறவந்தால்
இயல்பும் ஆகும்.
சா :
அது பொத்தகம்: இது+ஏடு=இஃதேடு.
அது
மேனி; அஃதுடம்பு பெற்றான் (திருக்குறள்)
இவை ஒலியிணக்கம் நோக்கிய விதிகள்.
222. நூ: அது சாரியை அன்; அஃது சாரியை பெறா.
பொ:
வேற்றுமைப்பட்டு உருபேற்குங்கால் அது இது என்பனவற்றிற்கு
அன் சாரியை யாகும். அஃது இஃது என்பன
சாரியை பெறா என்றவாறு.
சா:
அதனை; இதற்கு. அத்தினை; அத்திற்கு என ஒற்றிரட்டித்து
இன்பெறல் கொள்க. அதை என்பதுண்டேனும்
அதுக்கு என்பது ஒதுக்க
வழக்கு.
223. நூ: அவை இவை உருபுற அற்றே சாரியை
பொ:
அவை, இவை என்பன வேற்றுமையில் உருபு வந்தடைய
‘அற்று’ச் சாரியையாம்.
|