பக்கம் எண் :
 
பெ

    பொ : அவ்வாறு நிற்குஞ் சொற்களை அவற்றின் ஈற்றுக்கு முன்வரும்
எழுத்துகளான வல்லினமெய், மெல்லினமெய், இடையினமெய், தனிநெடில்,
ஆய்தம், உயிர் (மெய்) எழுத்துகளால் ஆறு வகைப்படுத்தி அவ்வெழுத்துப்
பற்றியே பண்டை நூல்கள் ஒலிக்குறிப்பெயர் தரும்.

சா : எஃகு - ஆய்தந்தொடர் குற்றியலுகரம்.  
  பஞ்சு - மென்றொடர்  
  நாடு - நெடில் தொடர்  
  பத்து - வன்றொடர்  
  மார்பு - இடைத்தொடர்  
  பயறு - உயிர்த்தொடர்  

    விரி: தனி நெடில் என்றமையான், தனிக்குறில் வந்தால் குற்றியலுகரம்
அன்றெனவும், நெடில்முன் பிற எழுத்து வருவதாயின் உயிர்த்தொடர்
ஆமெனவும் கொள்ளும் பண்டை வரையறை உணர்க.

    எனவே நெடில் தொடர் இறுதி வன்மையூருகரத்தைச் சேர்த்து
ஈரெழுத்துத் தோற்ற முடையதென்றுணர்க.

    அது, மடு-குற்றியலுகரம் அல்லனவாம்.  நாடு என்னும் நெடில்
தொடர்குற்றியலுகரம் மாநாடு எனின் உயிர்த்தொடர்க் குற்றியலுகரமாம்.

    பிறவைந்து குற்றியலுகரமும் ஈற்றயலான மெய் ஆய்தமும்
மொழிமுதலாகா உயிர்மெய்களும் மொழி முதல் நில்லாமையின் முதலாகும்
எழுத்தொன்றொடு சேர்ந்து குறைந்தளவாய் மூன்று எழுத்துகளிலும், மிகவாய்
மூன்றின் மிகுந்த எழுத்துகளிலும் நடக்கும் என்க.

    மிக்கது, வருவது, பிண்ணாக்கு, சுண்ணாம்பு, விளையாட்டு முதலியன. 
குரங்கு என்னுமிடத்துப் பின் நிற்கும் உகரமே, குற்றியலுகரம் உகரம் முன்
குறுகாமையின்.

    மெல், வல், இடையெனப் பிரிக்கவேண்டுவது ஈற்றயல் மெய்யா யடினே
அன்றி உயிர்மெய்வரின் அஃதோர் எழுத்தன்மையின் உகரஞ் சார்ந்து
நிற்கும் உயிரால் உயிர்த்தொடர் எனப்படும்.  நெடில்மட்டும் ஈற்றயலாங்கால்
நெடில்தொடர் எனப்படும்.  தொடர் என்பது ஈங்குத் தொடர்ந்து வருதல்
என்னும் பொருளது; அதனால் தொடர் குற்றியலுகரம் என்று
வலிமிகாதுரைத்தலே இந்நாள் சொல் தொடர்க்கு நன்றாம்.