பக்கம் எண் :
 
227

227. நூ: ‘நெடிலுயிர்த் தொடர்குற்றுகரத்திறுதி
        டறவொற் றிரட்டும், வேற்றுமை மிகுபால்.’

 

    பொ : நெடிலையும், உயிரையும் தொடர்ந்து வந்த குற்றியலுகரத்தில் ட
, ற இறுதி மெய் இரட்டிக்கும்-பெரும்பாலும் வேற்றுமைப் புணர்ச்சிக்கண்; (சிறுபால் அல்வழியிலும் இரட்டும்.)

 

வேற்றுமை: ஆறு + கரை = ஆற்றுக்கரை
  வீடு + வேலை = வீட்டுவேலை
  வயிறு + நோய் = வயிற்றுநோய்
அல்வழி குருடு + கிழவர் = குருட்டுக்கிழவர்.
  காடு + அரண் = காட்டரண்

 

    அல்வழி  மிகாமை:-  பாடுகிடந்தாட்கு (சிலம்பு);   மாறுபடு சூரரை (திருப்புகழ்). தமிழ் நாடு + அரசு = தமிழ்நாட்டரசு; அல்லது பிழை.  திருட்டு என்பது இரட்டித்த போக்கில் நிலைத்தது.

 

228. நூ: வன்றொடர் முன்வலி இருவழிமிகுமே.

 

    பொ: வன்றொடர் குற்றுகரத்தின் முன் வலிமுதல் இருவழியும் மிகும்.

 

    சா: அல்வழி:   சிறப்புத்தமிழ், பத்துத் தேங்காய், எடுத்துக்கொடுத்தான்.
        வேற்றுமை: நச்சுப்பாம்பு, மரத்துக்கிளை, பலவற்றுப்பகை
குறிப்பு+கள்=என்பது இறுதிநிலை இடைச்சொல் அல்வழிப்
புணர்ச்சியாய், குறிப்புகள் என்றாம்.  கருத்துக்கள் என்னுமிடத்துக் கள்
தனிச்சொல் போலச் சேர்க்கப்படின் ஒற்றுமிக்கும் வரலாம்.  ஒற்று
மிகாமையே நன்று.

 

229. நூ: மென்றொடர் மெலிசில வலித்தலும் ஆமே.

 

    பொ: மென்றொடர் குற்றுகரத்தில் மெலிமெய் சிலவிடத்து வலித்துத்
திரிதலும் ஆகும்.

 

    சா: நிரப்பு, மருத்துவர், சிலப்பதிகாரம், ‘கற்றாவின் மனம் போலக்

கசிந்துருக வேண்டுவனே.’

 

    (இதனான் பண்டைக்காலம், இற்றைநாள் என்பவற்றையும், தக்கவைத்துக்
கொண்டார் எனப்பிறவும் அடக்குக.)

 

230. நூ: இரட்டிய இரண்டும் வலித்ததும் வன்றொடர்

 

    பொ: ஈற்றயல் ட, ற இரட்டிக்கும் உயிர், நெடில் தொடர் குற்றுகரங்கள்
இரண்டும் மேல்வலித்த மென்றொடரும் வன்றொடர் போல் கருதிப் புணர்ச்சி
பெறும்.

    நாட்டுப்பற்று, ஆற்றுக்கரை, கற்றுக்குட்டி (கத்துக்குட்டி).