பக்கம் எண் :
 

    சா: மூவாறு-பதினெட்டு; ஐயைந்து-இருபத்தைந்து; முப்பது, மும்முனை
முவ்வடை; ஐம்பது; ஐம்புலன்.

    ஐம்மலர் என மெலி மிகுந்தது பொதுவிதியின் (211) அடங்கும்.
தாமிரட்டித்தும் எனப்பன்மையிற் கூறியது மூவின மெய்களைக் குறித்தற்கு.

236. நூ: நான்கும் எட்டும் இறுதி கெட்டு
        மேல் மெய் முறையே ல, ண ஆகும்.

    பொ: நான்கும், எட்டும் புணருங்கால் இறுதி உயிர்மெய் கெட்டுமேல்
நிற்கும் மெய் முறையே ல, ண வாகத்திரியும்.

    சா: நாலைந்து, நாலத்துஒன்று, எண்ணாறு, எண்சுவை நாற்பது,
நான்முகன், நானிலம் முதலியன பொதுவிதியால் அமையும்.  நாலு, மூனு
என்னும் வழக்கு சிறப்புடைத்தன்று.

237. நூ: தொண்டே ஒன்ப தாகுதல் தொன்மை
        மற்றது பத்து நூ றாயிரம் தம்மொடு
        உற்றிடும் போதில்ஈ றழிந்து ணளவாய்
        எட்டினைப் போல ஏற்றிடல் முறையே.

    பொ: தொண்டு என்னும் சொல்லே பழமையில் ஒன்பதைக்
குறிப்பதாகும்.  அது பத்து, நூறு, ஆயிரம் போன்ற சொற்களோடு
சேரும்போது இறுதி உயிர்மெய் கெட்டு எட்டைப்போல் ஈற்றயல் மெய் ‘ண்’
‘ள’ வ்வாயும் மாறிப்புணர்தல் முறையாகும் (பரி3 - தொல்-செய்)

    தொண்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம்.

    தொள்ளாயிரம் எட்டினின்று வேறுபடல் உணர்க.

238. நூ: ஒன்பது என்பது தொண்பதன் திரிபே.

    பொ: ஒன்பது என்று இக்கால் வழங்கும் சொல் தொண்பது என்ற
சொல்லின் திரிபாகும்.

சா: எட்டு 8 தொண்டு 9
  எண்பது 80 தொண்பது 90 (தொண்ணூறு)
  எண்ணூறு 800 தொண்ணூறு 900 (தொளாயிரம்)
  எண்ணாயிரம் 8000 தொள்ளாயிரம் 9000  (ஒன்பதாயிரம்)

    தொண்டு வழக்கழிந்ததும், தொண்பது முதல் மெய்கெட்டு டண்ணகரம்
றன்னகரமாய்த் திரிந்து மேலேறியது காண்க.

    நு: ‘ஒன்பதுஒன்று குறையும் பத்து’ என்றெல்லாம் அயல்மொழி
ஒப்பீட்டான் குழப்புவது பொருந்தாது என மறுத்தது இது.