பஃது, பத்து(பான்) இவற்றிற்கு
அடி‘பல்’ என்பதே. எண்பஃது என்பதே
எண்ம்ப(ல)து என்னும் தஞ்சை மாவட்ட வழக்கு: லகர ஆய்தத்தன்மைத்
திரிபு இதனை விளக்கும்.
242. நூ: முழுவெண் புணர்ச்சி உகரத்தன்மை.
பொ:
முழு எண்கள் புணருவதில் உகர இறுதிப் பெயர்களின்
புணர்ச்சித் தன்மை யொக்கும்.
சா:
இரண்டொன்று எனக் குற்றுகரம் உயிர்முன் அகலுதலும்
‘ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு’ என மென்றொடர்
அல்வழியில் மிகாமையும்,
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனவலி மிகுதலும் இவை போல்வனவும்
காண்க.
தனி
243. நூ: யவ்வல் சிலமெய் யாவரின் இய்யாம்.
ஏவலில் உவ்வும் சிலகால் பெறுமே.
பொ:
யவ்விறுதி யல்லாத மெய்ம்முன் யகரமுதற் சொல்வரின்
இயல்பாதலும் இகரம் பெறுதலும், ஏவல் வடிவில்
உகரம் பெறுதலும்
சிலவிடத்துச் செல்லும்.
சா :
பெறாமை: கழைதின் யானையார், மண்யானை மல்யாக்கை.
பெறுதல்: சிறுகளி யானை, பண்ணியாழ், முதலாமியாண்டு:
பேரியாழ்.
(திருக்குறள்) ஒப்பாரி என்பது ஒரே சொல் என்பது. ஓசை
ஒவ்வாமையானும், பிற ஆட்சி இன்மையானும்
பொருந்தாது.
‘விண்பாலியோகெய்தி’ (திருவாசகம்) தளைக்கட்டு நோக்கித் தவறாமையோடு
ஒப்புநோக்குக.
கம்மியன் என இரட்டித்து ஒரு சொல்லில் திரிதலும் கொள்க.
யகர முதன்மெய் ‘ய்’-இ ஒலியின் எதிரொலியே இப்புணர்வு. உகரம் இகரமாய்த் திரிதலும் இத்தன்மைத்தே.
சா:
வாரு, பாரு, செல்லு; சொல்லு, எண்ணு, தின்னு. உண்ணல்
உண்ணுதல் எனத் தொழிற்பெயர் இடையே
உகரம்பெறுதலும் கொள்க.
மெய்ம்முன்
வலிமெய்
யரழ
244. நூ: யரழமுன் இருவழி இயல்பு மிகல்வலி.
பொ:
யரழ இறுதிமுன் வலி இருவழியிலும் இயல்பாதலும் மிகலும் ஆம்.
|