பொ:
குறில் சார்ந்த ல, ள தம்முன் தகரம் வந்தால், அத்தகரத்தோடு
ஒன்றிக் கலந்து முறையே றவ்வாயும்,
டவ்வாயும், நகரம் வரின் அதனொடு
கலந்து முறையே னவ்வாயும், ணவ்வாயும் இருவழியும் மாறும். தனி
நெடிலோ, இரு குறிலோ, இரு நெடிலோ அடுத்துப் பிறவிறுதிகளாகும், ல, ள
முன் வலிவரின் திரிதலும்
இயல்பும் ஆகும்.
சா:
கடறாவு படலம், காமவேடீயன், செவ்வேணல்லன்,
பழங்கால்+நத்தம்=பழங்கானத்தம்.
இப்புணர்ச்சி முறை யொலியைப் பிறழ உணர்ந்து பழங்கா நத்தம்
என்பது பிழை.
அல்வழி: நாட்கள்; ஆட்கள்.
வேற்றுமை: வாட்பட்டடை; தோட்சுமை.
வாள்கள், தோள்கள் இன்னும் வலிக்கும் வழக்குப் பெற்றில. ஆயின்
இன்னும் சில்லாண்டில் வலிக்கும்,
‘கால் பெரிது’ கெடுக்கும். சூல் கொடிது:
வேற்படை; பாற்பாகு (பாயசம்) குழல் போலும் கூற்றம்
(குறள்) குடற்புண்
காய்ச்சல்; மரங்கள் பொலிந்தன; காலாட்படை.
‘தகரம் திரிந்தபின் கேடும், வருநத்திரிந்தபின் மாய்வும்’ என்று
நன்னூலார் நூற்றது-
கற்றீது என்புழி லகரம் றகரமாகத் திரிதலன்றித் தகரம் தனித் திரிந்து
றகரமாயிற்றென எண்ணியே
போலும். ஆயின் குறில் பின் ல, ள
ஒற்றிரட்டித்தல் போலத்தாம் திரிந்திரட்டித்தன வன்றித்
தகரம்
திரிந்தபின்தாம் திரியா எனவே இவ்வாறுரைத்தாம். அவரும் (237) பின்
ஒப்பியுள்ளார்.
ழ
249. நூ: ழகரம் சிலகால் ளகரத் திறம்பெறும்.
பொ:
ழகர ஒலி சிலவிடத்து ளகரம் போல் ஒலித்துச் செய்கைகள் பெறும்.
கீழ்த்திசை --> கீட்டிசை. திகழ் + தசக்கரம் = திகடசக்கரம்
வாழ்+நன்=வாணன். மகிழ்+நன்=மகிணன்.
சோழநாடு = சோணாடு.
இப்புணர்விலன்றித் தனிச்சொல் மாற்றமும் இங்குக் கொள்க.
சிமிழ்த்தல்=சிமிட்டல்; கண்ணிடந்த
(பெரி) போல்வன. வீழ்த்தினான் =
வீட்டினான் (பாரதம்) துழாய் - துளசி எதிர்மாற்றம்
இதுபோல்
வழங்கோசையால்தான் ழகரவொலி மக்களிடம் தெள்ளிதாதல் இலதுபோலும்.
|