புழைக்கை-பூட்கை எனத்திரிதலும் இவ்வகையே. ஓடாப்-பூட்கை
உரவோர் மருக. பூண்+கை-பூட்கை=மேற்கோள்.
அறத்தாறு நுவலும் பூட்கை
(புறம்).
புகல்-புகழ் என மாறல் சிறுபால்
(இசையொழிய: உரைப்பார் உரைப்பவை (குறள்) எனவே இசையும்
உரையுமாய்ப் பாராட்டுப் புகல்வதே
புகழ்).
ன
250. நூ: இன்மை இல்முன் வலிவரின் இயல்பும்
ஆப்பெற் றடையின் மிகலும் ஆகும்.
பொ:
இன்மைப் பொருள்தரும் ‘இல்’ என்னும் சொல்முன்னே
வலிமுதல் வந்தால் இயல்பும், ஆவேறி வரின்
மிகுதலும் ஆகும்.
சா:
இல் பொருள்; இல்கவின் புதுமை ஓவியம்; இல்லாக்காலன்,
இல்லாத்திறம் கொடிது. ‘இல்’ இற்பொருள்
எனத்திரியின்
மனைப்பொருளைக் குறிக்கும். இல்லை என்னும் வடிவு இக்கால் இடையில்
வருதல் (இல்லை
தவறவர்க்காயினும் - குறள்) சிறுபாலும் மிகாது.
இல் என்பதனால் அல்லும் ஆகும்.
அறனை நினைப்பானை அல்பொருள் அஞ்சும்; அல்லாக்கையன் முதல.
இவை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தன்மையனவாகலின்
மிக்கன.
ன ண
251. நூ: ‘ண ன வல் லினம்வரட் டறவும் பிறவரின்
இயல்பும் ஆகும் வேற்றுமைக்கு: அல்வழிக்கு
அனைத்து மெய்வரினும் இயல்பாகும்மே.’
பொ:
வேற்றுமை வழியில் ண, னமுன் வல்லினம் வரின் ட,றவும் பிறமுதல்வரின் இயல்பும் ஆகும். அல்வழியில்
எம்மெய்வரினும் இயல்பாகும்.
சா:
மண்யானை; பண்வாழ்வு; கவண்கல்; மீன்கறி; கட்கடை; பொற்பதக்கம்.
பண்பாடினர், புண்பொதியுமாறு (பழமொழி) என மாறி வருவனவும் சிலவாம்.
252. நூ: குறிலணை னணமுன் நத்தான் னணவாம்
குறிலடை வின்றேல் அவற்றோ டொன்றியாம்
இருவழிக் கண்ணும்; தனித்தனி றடவாம்.
பொ:
இருவழியிலும் குறிலணைந்த ன,ணவுக்கு முன் நவ்வரின்
ன,ணவாகும், குறிலடுத்திலவேல் அவற்றோ டொன்றிக்
கலந்து னணவாய்த்
திரியும். இரு நிலையிலும் தகரம் தனித்து றடவாகும்.
|