சா:
பொன்னகை: மண்ணசை. கூத்தானல்லூர், செம்மணிலம்.
எண்டிசை, மண்டேய்த்த புகழினான். பண்டேய்த்த
மொழியினாள்.
(சிலம்பு) பொற்றுகள், மட்டிரள் என்பன பொதுவிதியான் (254) அமையும்.
புன்னகை,
எண்ணெய் முதல குறில்வழி ல,ள இரட்டித்தல் இங்கே அமைக்க.
253. நூ: லளவொடு நதக்கள் னணறட வாகும்.
நு:
ன, ண, ல, ளத் திரிபுகள் பற்றிய ஒலி யியைபு உணர்த்துகிறது.
பொ:
லவ்வொடும் ளவ்வொடும் நவ்வும் தவ்வும் சேர்ந்து ன,ணவாகவும்
றடவாகவும் மாறும்.
சா:
ல்+ந=ன ல்+த=ற
ள்+ந=ண ள்+த=ட
இதற்கு முன்னெடுத்துக் காட்டுகள் சாலும்.
மற்று
னண+த=றடவாம் என்று நன்னூல் கூறுவது ன,ண ஒலியுள் இருக்கும் ல,ள ஒலியானே. த-அவற்றின் முன்றடவாதலை
முன்னூற்பாக்களை நோக்கின் மொழியியல் நோக்கா இலக்கண முடிபெனவாம். இதனைக் கீழ்வரும்
மீள்புணர்வால் உணரலாம்.
ன்+ந=ன ன்+த=ற
ண்+ந=ண ண்+த=ட
தவ்விற்கு மேலிரண்டனுள் வேறுபாடு ன,ண முன் தகரம்தான் தனித்திரிதலும், ல,ளமுன் அவற்றையும் திரித்துத்தான்
திரிதலும் என்க. இவற்றைக் குறிலடுத்த புணர்ச்சியால் தெரியலாம்.
விருந்தாளி-விருந்தாடி. களவாளி - களவாணி ஒப்பு நோக்குக.
ஒல்லும்-(ஒன்னும்) ஒண்ணும் (அறியொண்ணா-சுந்தரர்) இந்நூற்பாச் செய்தியை மனங்கொளின் பிழைத்திரிபு.
ல, ள, ன, ண திரிபுப் புணர்ச்சியை ஒருவாறு பிரித்துணரலாம் ஆயின் இனித்தொடராக்க நிலையில்
இன்றியமையாத் தொகைத் தொடர் இடங்களில் அன்றிப் பிறவிடத்துப் பிரித்தெழுதலாம்.
பால்க்கடல், கல்கண்டு போன்ற சொற்பிழைகள், முட்டாட் டாமரை, நாட்டாளிதழ், அட்டூணிடுழனி
போலும் செறிவுப் புணர்ச்சி வலியுறுத்தலின் எதிர்விளைவே.
மகரவிறுதி
254. நூ: மவ்வுக்கத்தே வேற்றுமைச் சாரியை.
பொ:
மவ்விறுதிச் சொற்கள் பிற சொல்லொடு வேற்றுமைப் பொருளில் இணையும் கால் அத்துச் சாரியை பெறும்.
சா:
செல்வத்துள் செல்வம். மரத்துக்கிளை.
இந்நூற்பா ‘அத்தின் அகரம் அகரமுனை இல்லை’ என்னும் நூற்பாப்பொருளோடு நோக்குடைத்து.
|