சா:
வந்தாயா? என்ற வினாவிற்கு, வாராதிருப்பேனோ, வந்திலனோ, என
எதிர்வினாவிய உடன்பாட்டுப்
பொருளும், வருவேனோ? என எதிர்மறைப்
பொருளும் விடை விளைத்தவாறு காண்க.
ஈற்றயல்
மாற்றம்
264. நூ: ன, ள, ர, ய இறுதியாம் பெயரின் ஈற்றயல்
ஆ, ஓ ஆதலும் செய்யுட் குரித்தே.
பொ:
ன, ள, ர, ய இறுதியமைந்த உயர் முப்பால் பெயர்களது ஈற்றின்
முன்நிற்கும் ஆ - ஓவாகமாறலும் செய்யுட்கு
உரித்தாம்.
சா:
சான்றோனாக்குதல், ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர
பலர் (புறம்) சான்றோன் எனக்கேட்டதாய்,
சொல்லப் பயன்படுவர்
சான்றோர் (குறள்) இவை திரிந்த ஓவே இயல்பு வழக்காயின. தொடியோள்,
நெடியோன் என்பன ஈற்றயல் ‘ஆ’கார ஈற்றயல் கொண்டதே எனக் கொள்க.
மற்று மலை கிழவோன் நாடு
கிழவோன் என அகரம் திரிதல் ஒருபால்
வழக்கு என அமைக்க. வாயிலோயே வாயிலோயே என்பது
யவ்விறுதிக்காட்டு.
வினையையும் நன்னூல் சேர்த்துக்கூறியது, உண்மையில்
வினையாலணையும் பெயராதலின் கூட்டிலம்.
265. நூ: முற்றும்மையையீற் றுடைரவ் வீற்றின்
எல்லாரும் என்பதும் இத்தன் மைத்தே.
பொ:
முற்றுமையை ஈற்றிலே கொண்டுடைய ரகர இறுதியாய எல்லாரும்
என்பதும் மேற்கூறிய தன்மையாம்.
எல்லாரும்-எல்லோரும்.
மகர இறுதியாய் நிற்றலின் தனித்துரைத்தாம். இதனால் எல்லாரும்
என்னும் சொல்லமைப்பும் பிழையின்றென
விளக்கப்பட்டது.
முழுமைச் சொற்கள்
266. நூ: கூறு படாப் பொருள் எல்லாம் பெறுமே.
பொ:
கூறுபடுத்தல் இல்லாத திரள் பொருள்கள் தன்மையைக் குறிக்க
எல்லாம் என்னும் முழுமைச் சொல் பெறும்.
சா:
நீரெல்லாம் சுண்டி வானெல்லாம் இருளக்காரெல்லாம் மண்டி நிலமெல்லாம் குளிரப்பெய்யும் மழை;
காலமெல்லாம் உழைத்தோய்ந்தார்.
|