சந்தி
173. நூ: இடைநிலை முதனிலை இணையும் சந்திப்
பிடம் பட வருவதுசந்தி; அதுவே
தவ்விற்குத் த,ந நிகழ்விற்குக் கவ்வே
பவ்விற்குப் பகரம் என மூவகையே.
பொ:
இடைநிலை முதனிலையோடு இணையும் சந்திப்பிற்கு இடமாக
வருவது சந்தி; அது இறந்தகாலத்தில் சந்தி
பெற்று நடக்கும் தவ்விடைநிலை
முன் தகரமாயும், நகரமாயும்; நிகழ்காலக் ககரமுதல் இடைநிலை
இரண்டற்குமுன்
அவ்வொற்றாகவும்; எதிர்காலத்திடைநிலை
இரண்டிலொன்றாம் பகரத்தின் முன்பவ்வொற்றாயும் தோன்றுவதால்
மூவகையாகும்.
சா:
படித்தான்; நடந்தான்; நடிக்கிறான்; நடிக்கின்றான்; படிப்பான்.
தகர இடைநிலை முன்னே
‘ந’கரம் வருவது த், ந், திரிபாக உரைப்பர்
பலரும்; ஆயின் பூந்தோட்டம் என்றும், பூத்தோட்டம்
என்றும் புணர்தல்
உண்மையான் இயல்பாய்த் தோன்றிய சந்தியே என்க. மடிந்தான்; மடித்தான்
என்றக்கால் நகர வொற்று வந்ததனைத் தகரமாக்கினால் பிறவினையாகப்
பொருள் வேறுபடுதலான் என்க.
தகரவொற்றுத் திண்ணமாய்த் தோன்றுவதும், ககரமும், பகரமும்-
விழைகிறான், உண்பான் எனத் தவிர்ந்து
வருதலும் உரையிற் கொள்க
மற்றிவை தவிர்தலும் வருதலும் புணரியல் செய்தியோடொத்தலின்
அப்பயிற்சியான்
இது விளங்கும்.
திரிபு
174. நூ: ல,ள இறுதி முதனிலை இரண்டும்
வலிமெய் இடைநிலை வந்துசொல்லாங்கால்
றட என்றோ னண என்றோ
மெய் பிறிதாகித் திரிதல் திரிபே.
பொ:
ல, ள என்னும் இறுதியையுடைய இரு முதனிலைகளும் வலிமுதல்
எழுத்துடைய இடை நிலைகள் மட்டில் வந்து
புணர்ந்து சொல்லுருவம்
பெறுங்கால் ல,ள முறையே றட என்றோ ன, ண என்றோ மெய்ம்மாறித்
திரிவது
திரிபு என்க.
சா: |
கல் |
+ |
ற் |
+ |
ஆன் |
= |
கற்றான் |
- |
ல் |
- |
ற்(விற்றான்) |
|
நில் |
+ |
ற் |
+ |
ஆன் |
= |
நின்றான் |
- |
ல் |
- |
ன்(நின்றான்) |
விண்டான் |
= |
விள் |
+ |
ட் |
+ |
ஆன் |
- |
ள் |
- |
|
ண்.(கொண்டான்) |
|