எழுத்ததிகாரம் | 10 | முத்துவீரியம் |
நெடுமையின் மறுபெயர்கள்
11. நெடுமையுந் தீர்க்கமு
நெட்டுயி ராகும்.
(இ-ள்.) நெடுமையெனினும்
தீர்க்கமெனினும் நெட்டெழுத்தென்னும்
ஒருபொருட்கிளவி.
(11)
மெய்யெழுத்து
12. ககரமுதன் மூவாறுங்
காத்திர மாகும்.
(இ-ள்.) மெய்யெழுத்து க, ங,
ச, ஞ, ட,ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ ழ, ள, ற, ன
ஆகிய
பதினெட்டுமாமென்க. (12)
மெய்யின் மறுபெயர்கள்
13. ஊமையு மொற்று முடலெனப்
படுமே.
(இ-ள்.) ஊமையெனினும்,
ஒற்றெனினும், மெய்யென்னும் ஒருபொருட்கிளவி. (13)
வல்லெழுத்து
14. அவற்றுள்
வல்லெழுத் தென்மனார்
கசட தபற.
(இ-ள்.) முற்கூறிய
பதினெட்டு மெய்யினுள் க, ச, ட, த, ப, ற ஆகிய ஆறும்
வல்லெழுத்தாகும். (14)
வன்மையின் மறுபெயர்கள்
15. வன்மைவன் கணம்வலி
வல்லெழுத் தாகும்.
(இ-ள்.) வன்மையெனினும், வன்கணமெனினும்,
வலியெனினும், வல்லெழுத்தென்னும்
ஒருபொருட்கிளவி. (15)
மெல்லெழுத்து
16. மெல்லெழுத்
தென்மனார் ஙஞண நமன.
(இ-ள்.) ங, ஞ, ண, ந, ம, ன
ஆறும் மெல்லெழுத்தாமென்க, (16)
|