எழுத்ததிகாரம் | 9 | முத்துவீரியம் |
முதல் எழுத்தின்வகை
5. உயிருட லெனமுத லோரிரு
வகைய.
(இ-ள்.) முதலெழுத்து,
உயிரெழுத் தெனவும் மெய்யெழுத்தெனவும் இரண்டு
பிரிவினவாமென்க. (5)
உயிர் எழுத்து
6. அகர முதலுயி ராறிரண்
டாகும்.
(இ-ள்.) உயிரெழுத்து அ, ஆ,
இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள ஆகிய
பன்னிரண்டுமாமென்க. (6)
உயிர் என்பதன்
மறுபெயர்கள்
7. அச்சாவி சுரம்பூத
மாமுயி ரென்ப.
(இ-ள்.) அச்செனினும், ஆவியெனினும்,
சுரமெனினும், பூதமெனினும் உயிரென்னும்
ஒருபொருட்கிளவி. (7)
குற்றெழுத்து
8. அ, இ, உ, எ, ஒக்குறி
லாகும்.
(இ-ள்.) முற்கூறிய உயிர்
பன்னிரண்டனுள், அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும்
குற்றெழுத்தாமென்க. (8)
குறுமையின் மறுபெயர்கள்
9. குறுமை யிரச்சுவங்
குறிலெனப் படுமே.
(இ-ள்.) குறுமையெனினும், இரச்சுவமெனினும்,
குற்றெழுத் தென்னும்
ஒருபொருட்கிளவி. (9)
நெட்டெழுத்து
10. ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ,
ஒளநெடில்.
(இ-ள்.) மேற்கூறிய உயிர்
பன்னிரண்டனுள், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவ்வேழும்
நெட்டெழுத்தாமென்க. (10)
|