எழுத்ததிகாரம் | 8 | முத்துவீரியம் |
இங்ஙனமே ஏனைய சொல்,
பொருள், யாப்பு, அணி அதிகாரங்களின்
தோற்றுவாயிலும
இறைவனைப் பொதுப்படக் கூறுவர். ‘அப்பொருள் அடிதொழுது’
என்பதால் தெய்வ
வணக்கமும், ‘அறைகுவன் எழுத்தே’
என்பதால் செயப்படு பொருளும்
எய்தப் படுதலின் இது
தற்சிறப்புப் பாயிரமாயிற்று. அதிகரித்தல் - மேற்படுதல். ஒரு
நூலிலிருக்கும் பல
பகுதிகளிலும், எவ்வெப் பகுதியில்
எவ்வெப்
பொருள்கள்
தலைமையாக
எடுத்துரைக்கப்படுகின்றனவோ
அவற்றைக் கொண்டு அவ்வப் பகுதிகள்
பெயர் பெறும்.
எழுத்ததிகாரம் என்ற பகுதியில் எழுத்துக்களின்
இலக்கணமே
தலைமையாகக்கொண்டு
அப்பகுதி முழுதும்
எடுத்துச் சொல்லப்படுதலால்
எழுத்ததிகாரமாயிற்று.
தண்டத்தலைவர் - தானைத்தலைவர். ‘நல்லவை யெல்லாம்
தீயவாம்’ என்ற
திருக்குறளில் ஊழ் என்பது அதிகாரத்தான்
வந்தது என எழுதியிருப்பது பின்னையதற்குக்
காட்டாகும்.
1. எழுத்தியல்
எழுத்தென்றற்குக்
காரணம்
1. எழுதப் படுதலி னெழுத்தா
கும்மே.
(இ-ள்.) கையில்
எழுத்தாணியைக் கொண்டு மடன்மேல் எழுதப்படுதலால்
எழுத்தாகுமென்க. (1)
அதன் வடிவு
2. எழுத்தொலி வடிவரி
வடிவையு மேற்கும்.
(இ-ள்.) எழுத்துச்
செவிப்புலனால் அறியும் ஓசை வடிவையும், கட்புலனால்
அறியும்
வரி வடிவையும் ஏற்குமென்க. (2)
எழுத்தின் மறுபெயர்கள்
3. இரேகை வரிபொறி
யெழுத்தின் பெயரே.
(இ-ள்.) இரேகையெனினும், வரியெனினும்,
பொறியெனினும் எழுத்தென்னும்
ஒருபொருட்கிளவி. (3)
எழுத்தின்வகை
4. அதுமுதல் சார்பென
வாமிரு பாலன.
(இ-ள்.) அவ்வெழுத்து, முதலெழுத்தெனவும்,
சார்பெழுத்தெனவும்
இருபகுதியவாகுமென்க. (4)
|