பக்கம் எண் :
 
சொல்லதிகாரம்127முத்துவீரியம்

உயர்திணை

468. ஆண்பெண் பலரென முப்பாற் றுயர்திணை.1

(இ-ள்.) ஆண்பாலும் பெண்பாலும் பலர்பாலும் என உயர்திணை மூன்றுபாலினை
யுடைத்தாம்.

(வ-று.) அவன், அவள், அவர். (11)

அஃறிணை

469. ஒன்றே பலவென் றிருபாற் றஃறிணை.2

(இ-ள்.) ஒன்றன்பாலும் பலவின்பாலுமென அஃறிணை இரண்டு பாலினையுடைத்தாம்.

(வ-று.) அது, அவை. (12)

பெயர் வினைகள் இடவகையால் பொருள் உணருமாறு

470. படர்க்கைப் பெயர்வினை முற்றிரு திணைபால்
     அனைத்தும் பெறப்படு மல்லன விரண்டும்
     ஒருமையும் பன்மையும் பெறுமென மொழிப.

(இ-ள்.) படர்க்கைப் பெயர்ச்சொல்லும் படர்க்கைவினை முற்றுச்சொல்லும்
இருதிணையைம்பாலும் பெறும்; தன்மையும் முன்னிலையும் ஒருமையும் பன்மையும் பெறும்.

(வ-று.) அவன், அவள், அவர், அது, அவை, படர்க்கைப் பெயர். நடந்தான்,
நடந்தாள், நடந்தார், நடந்தது, படர்க்கைவினைமுற்று. நீ, நீர், முன்னிலைப்பெயர், யான்,
யாம், தன்மைப்பெயர். நடந்தாய், நடந்தீர், முன்னிலை வினைமுற்று. நடந்தேன், நடந்தேம்,
தன்மை வினைமுற்று.

(வி-ரை.)

‘படர்க்கை வினைமுற்று நாமங் குறிப்பிற்
பெறப்படுந் திணைபா லனைத்து மேனை
இடத்தவற் றொருமைப் பன்மைப் பாலே’ (நன் - பெயரி - 8)

என்ற நன்னூலைத் தழுவியது இது. (13)

மூவிடம்

471. முன்னிலை தன்மை படர்க்கைமூ விடனே.

1. நன் - சொல் - பெயரி - 5.

2. நன் - சொல் - பெயரி - 6.