பக்கம் எண் :
 
சொல்லதிகாரம்164முத்துவீரியம்

(இ-ள்.) முற்கூறிய எட்டனுள் அம், ஆம் என்கிற இரண்டீறுந் தன்னிலையில்
நிற்கையன்றி முன்னிலையையும் உடன்படுக்கும்.

(வ-று.) உண்டனம், உண்டாம், யாம், யானும்; நீயும். (6)

எம், ஏம்

600. எம்மேம் படர்க்கை யிடத்தையு மேற்கும்.

(இ-ள்.) எம், ஏம் என்கிற இரண்டீறும், தன்னிலையில் நிற்கையன்றிப்
படர்க்கையையும் உடன்படுக்கும்.

(வ-று.) உண்டனெம், உண்டேம், யாம்; யானும் அவனும். (7)

கும், டும், தும், றும்

601. கும்டும் தும்றும் மாகிய நான்கும்
     படர்க்கைமுன் னிலையொடும் படரு மென்ப.

(இ-ள்.) கும், டும், தும், றும் ஆகிய நான்கீறும் தன்னிலையில் நிற்கையன்றி,
முன்னிலையும் படர்க்கையும் உடன்படுக்கும்.

(வ-று.) உண்கும், உண்டும், வருதும், சேறும், யாம்; யானும், நீயும் அவனும். (8)

தன்மை ஒருமை வினைமுற்று

602. குடுதுறு வென்னுங் குன்றிய லுகர
     இறுதியு மென்னே னல்லிறு கிளவியுந்
     தன்வினை யுரைக்குந் தன்மைச் சொல்லே.

(இ-ள்.) கு, டு, து, று என்னுங் குற்றியலுகரத்தை யிறுதியாகிய மொழியும், என், ஏன்,
அல் என்னும் ஈற்றவாகிய மொழியும் ஒருமையைத் தெரிவிக்குந் தன்மைக்கிளவியாம்.

(வ-று.) உண்கு, உண்டு, வருது, சேறு, உண்டனென், உண்டேன், உண்பல். (9)

செய்கு

603. செய்கென் கிளவி வினையொடு முடியினும்
     விளம்பிய முற்றா மென்மனார் புலவர்.