சொல்லதிகாரம் | 173 | முத்துவீரியம் |
மோங்கும்; மழை பெய்யப்
புகழ்பெற்றது, மழை பெய்ய மரங்குழைத்தது; மழை பெயற்கு
முழங்கும், மழை பெயற்குக் கடவுள்
வாழ்த்துதும். (34)
பெயரெச்சம்
628. 1 செய்த செய்கின்ற
செய்யுமென் பாட்டிற்
காலமுஞ் செயலுந்
தோன்றிப் பாலொடு
செய்வ தாதி யறுபொருட்
பெயரும்
எஞ்ச நிற்பது பெயரெச் சம்மே.
(இ-ள்.) செய்த,
செய்கின்ற செய்யும் என்னு மூவகை மொழிகளிலே
முக்காலமும்
தொழிலும் தோன்றிச் செய்பவன் முதலியவைகளொழிய
நிற்பன பெயரெச்சவினைக்
குறிப்புகளாம்.
(வ-று.) உண்டசாத்தன்,
உண்கின்றசாத்தன், உண்ணுஞ்சாத்தன். (35)
பெயரெச்சத்திற்குரிய
பொருண்மை
629. காலம் பொருணிலங்
கருவி வினைமுதல்
வினையோ ரறுவகைப்
பொருட்கு முரிய.
(இ-ள்.) அப்பெயரெச்சம்
காலமும், பொருளும், நிலமும், கருவியும், வினைமுதலும்,
வினையும் ஆகிய வாறு பொருட்கு மொத்த வுரிமையவாம்.
(வ-று.) துயிலுங்காலம்,
காலம்; ஓதும் பார்ப்பான், பொருள். பிறவுமன்ன. (36)
இடைப் பிறவரல்
630. தத்தங் குறைவா
மிருவகைப் பெயருடன்
இயையுங் குறிப்புடை
யெச்சொ லாயினும்
இடைநிலை வரையா
ரென்மனார் புலவர்.
(இ-ள்.) தத்தமெச்சமாகிய பெயரொடும்
வினையொடுமியையும் குறிப்பையுடைய
வெச்சொலாயினுந் தமக்கு நடுநிற்றலை நீக்காது
கொள்வார் புலவர்.
(வ-று.) உழுது வந்தான்,
கொன்ற காட்டுள் யானை.
1. நன் - சொல் - வினை - 21.
|