சொல்லதிகாரம் | 176 | முத்துவீரியம் |
(இ-ள்.) இது செயல்வேண்டும்
என்பதுபட வருமொழி தன்பாலானும், பிறன்பாலானும்
என ஈரிடத்தும் நிலைபெறும் பொருண்மையை
யுடையனவாம்.
(வ-று.) ஓ ஓதல்வேண்டும்,
ஓதற்கு வினைமுதலாயினாற்கும், அவன் ஓதலைவிரும்புந்
தந்தைக்கு மேற்றவாறு காண்க. (44)
(வி-ரை.) ‘தன்பாலானும்
பிறன்பாலானும்’ என்ற இறுதி வரியுடன் இந்நூற்பா
தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளது.
வன்புற வரும் வினாவுடை
வினைச்சொல்
638. வன்மைப்
பொருள்வயின் வரும்வினா வினையை
எதிர்மறுத் துரைப்பினு
மிழுக்கா வாகும்.
(இ-ள்.) கடினப்
பொருட்கண்வரும் வினாவையுடைய வினைச் சொல்லை
எதிர்மறுத்துரைப்பினுங் குற்றமிலவாம்.
(வ-று.) வைதாய், வைதேனோவென
வினாவொடுவந்த வினைச்சொல்,
வைதிலேனென்னும் எதிர்மறைப்பொருள்பட வந்தமை
காண்க. (45)
காலமயக்கம்
639. எதிர்விற் குரிய வினைச்சொற் கிளவி
தெளிவு மியற்கையுஞ் செப்புங் காலை
இறப்பினு நிகழ்வினு மியம்பப் படுமே.
(இ-ள்)
எதிர்காலத்துக்குரிய வினைச்சொல்லைத்
தெளிவுமியற்கையுங் கூறுங்கால்
இறந்தகாலச்
சொல்லானும் நிகழ்காலச் சொல்லானுங்கூறுப.
(வ-று.) இக்காட்டிற்
போகிற் கூறைகோட்பட்டான், கூறை கோட்படும் இயற்கை;
எறும்பு
முட்டைகொண்டு திட்டையேறின், மழைபெய்தனூலாற்
றெளிந்தான், அவை முட்டைகொண்டு
ஏறியவழி மழை பெய்யாமுன்னு மழை பெய்தது,
மழைபெய்யும், தெளிவு. (46)
செயப்படுபொருள்
640. செயப்படு பொருளைச்
செய்தது போலத்
தொழிற்படக் கிளத்த
றொல்லியன் மரபே.
(இ-ள்.) செயப்படு
பொருளைச் செய்த வினைமுதலைப் போலத்
தொழிற்படக் கூறல்
வழக்கின்க ணியலும்.
|