சொல்லதிகாரம் | 177 | முத்துவீரியம் |
(வ-று.) திண்ணைமெழுகிற்று.
(47)
காலமயக்கம்
641. இறப்பு மெதிர்வு
மயங்கியு மியலும்.
(இ-ள்.) இறந்தகாலமும்
எதிர்காலமு மயங்கு மொழிப் பொருளனவாம்.
(வ-று.) இவர் பண்டு
இப்பொழிற்கண் விளையாடுவார், நாளையவன் வாளோடு
வெகுண்டுவந்தான், பின் நீ யென்செய்குவை எனவரும்.
(48)
இதுவுமது
642. நிகழ்வு மவற்றொடு நிலவுதல் வரையார்.
(இ-ள்.) நிகழ்காலமு மவற்றொடு மயங்கும்.
(வ-று.) இவள் பண்டு
இப்பொழிற்கண் விளையாடும் நாளைவரும். (49)
வினையியல் முற்றும்.
3. ஒழிபியல்
இடைச்சொல் பிறக்கும்
இடம்
643. பெயர்வினை யிடத்துப்
பிறப்ப திடைச்சொல்.
(இ-ள்.) பெயரிடத்தும்
வினையிடத்துந் தோன்றுவது இடைச் சொல்லாமென்க.
(1)
அதன் வகை
644. வேற்றுமை வினைசா ரியையொப் புருபுகள்
இசைநிறை யசைநிலை யிருமூன்று திறத்தன.
(இ-ள்.) ஐ முதலிய
வாறுருபுகளும், அன் முதலிய சாரியை யுருபுகளும்,
போலமுதலிய வுவமையுருபுகளும், செய்யுளிசைநிறைத்து
வருவனவும், அசைத்தலே
பொருளாக நிற்பனவும், அன், ஆன் முதலிய வினையுருபுகளும் ஆகிய ஆறு
திறத்தனவாம்
அச்சொலென வறிக.
|