பக்கம் எண் :
 
சொல்லதிகாரம்178முத்துவீரியம்

(வ-று.) நம்பியை: பெயரின் புறத்துறுப்பாய் ஐயுருபும், முடியினன்: அகத்துறுப்பாய்
விகுதியும் இடைநிலையும், உண்ணான்: வினையினகத்துறுப்பாய் விகுதியுருபும் வந்தன. (2)

மன்

645. ஆக்கம் ஒழியிசை கழிவையுங் தருமன்.

(இ-ள்.) மன்னென்னும் இடைச்சொல், ஆக்கங்குறித்து நிற்பதும், ஒழியிசைப்
பொருண்மையைக் குறித்து நிற்பதும், கழிவைக் குறித்து நிற்பதும் ஆகிய மூன்றையுந்
தருமென வறிக.

(வ-று.) பண்டு காடுமன், ஆக்கம்; கூரியதோர் வாண்மன், ஒழியிசை; சிறியகட்பெறினே
யெமக்கீயுமன்னே (புறம் - 235) கழிவு. (3)

தில்

646. 1 விழைவே கால மொழியிசை தில்லே.

(இ-ள்.) தில்லென்னு மிடைச்சொல், விழைவைக் குறித்து நிற்பதும் காலத்தைக்
குறித்து நிற்பதும், ஒழியிசையைக் குறித்து நிற்பதும் ஆகிய மூன்றையுந் தரும்.

(வ-று.) ‘அரிவையைப் பெறுக தில்லம்ம யானே’ (குறுந் - 14) விழைவு;
‘பெற்றாங்கறிக தில்லம்ம’ (குறுந் - 18) காலம்; ‘வருகதில்லம்ம’ (அகம் - 276) ஒழியிசை.
(4)

கொன்

647. அச்சம் பயமிலி காலம் பெருமையென்
     றப்பா னான்கே கொன்னைக் கிளவி.

(இ-ள்.) கொன்னென்னும் இடைச்சொல் அச்சப் பொருளதும், பயமின்மைப்
பொருளதும், காலப்பொருளதும், பெருமைப்பொருளது மாகிய, நான்கையும் தரும்.

(வ-று.) ‘கொன்முனை யிரவூர்போல’ (குறுந் - 91) அச்சம்; ‘கொன்னே கழிந்தன்று,’
(நாலடி - 55) பயமின்மை; ‘கொன்வரல் வாடை,’ காலம்; ‘கொன்னூர் துஞ்சினும்’ (குறுந் -
138). பெருமை. (5)

1. நன் - இடை - 12.