சொல்லதிகாரம் | 179 | முத்துவீரியம் |
உம்
648. எதிர்மறை யெச்சமுற்
றெண்ணே தெரிநிலை
ஐயஞ்சிறப் பாக்கமு
மளிக்கு மும்மை.
(இ-ள்.) உம்மென்னு மிடைச்சொல்,
எதிர்மறையும் எச்சமும் முற்றும், எண்ணும்,
தெரிநிலையும், ஐயமும், சிறப்பும், ஆக்கமும் ஆகிய
எட்டுப்பொருளையுந் தரும்.
(வ-று.) சாத்தன் வருதற்கு
முரியன் - எதிர்மறை; சாத்தனும் வந்தான் - எச்சம்;
தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார் - முற்று; நிலனு
நீருந்தீயும் - எண்; திருமகளுமல்லள் -
‘தெரிநிலை;
இளிவந்துஞ் சொல்லும்’ (கலி - 47) ஐயம்;
குறவருமருளுங் குன்று. (மலைபடு
-275) சிறப்பு; ஆக்கம்,
வந்துழிக் காண்க. (6)
ஓகாரம்
649. தெரிநிலை யெதிர்மறை
சிறப்புப் பிரிநிலை
ஒழியிசை வினாவா றோகா
ரம்மே.
(இ-ள்.) தெரிநிலையும், எதிர்மறையும்,
சிறப்பும், பிரிநிலையும், ஒழியிசையும்,
வினாவுமாகிய ஆறுபொருளையும் ஓவென்னும் இடைச்சொல் தரும்.
(வ-று.) திருமகளோவல்லள் -
தெரிநிலை; சாத்தனுண்டானோ - எதிர்மறை; ஓ ஒ
பெரியன் - சிறப்பு; யானோ தேறேனவர் பொய் (குறுந்
- 21) பிரிநிலை; கொளலோ
கொண்டான் - ஒழியிசை;
சாத்தனுண்டானோ - வினா. (7)
ஏகாரம்
650. எண்ணே பிரிநிலை ஈற்றசை தேற்றம்
வினாவோ ரைந்தும்
விளக்கு மேகாரம்.
(இ-ள்.) ஏ யென்னும் இடைச்சொல்லும்
எண்ணும், பிரிநிலையும், ஈற்றசையும்,
தேற்றமும், வினாவுமாகிய ஐந்து
பொருளையுந் தருமென்க.
(வ-று.) நிலனே நீரே தீயே,
எண்; அவருளிவனே கள்வன், பிரிநிலை; ‘காடிறந்தோரே’
(அகம் - 1) ஈற்றசை; உண்டே மறுமை, தேற்றம்; நீயே
கொண்டாய், வினா எனவரும். (8)
|