சொல்லதிகாரம் | 180 | முத்துவீரியம் |
என, என்று
651. எண்ணே குறிப்பே
இசையே பண்பே
வினையே பெயரே எனவோ ராறினும்
எனவெனு மொழிவரும் என்று
மற்றே.
(இ-ள்.) எனவென்னும் இடைச்
சொல்லும், என்றென்னும் இடைச்சொல்லும், எண்ணும்,
குறிப்பும், இசையும், பண்பும், வினையும், பெயருமாகிய
ஆறுபொருளையுந் தரும்.
(வ-று.) நிலனென நீரெனத்
தீயென, எண்; துண்ணெனத் துடித்தது, குறிப்பு; ஒல்லென
வொலித்தது, இசை; வெள்ளென விளர்த்தது, பண்பு; ‘மலைவான்
கொள்கென, (புறம் - 143)
வினை; ‘அழுக்கா
றெனவொருபாவி, (குறள்-168) பெயர்; என்றும் இவ்வாறே
ஒட்டிக் காண்க.
(9)
மற்றையது
652. மற்றைய தென்பது
சுட்டிய தற்கினம்.
(இ-ள்.) மற்றையதெனப்
பெயர்க்கு முதனிலையாய் வரும் மற்றையென்னும் ஐகார
ஈற்றிடைச்சொல், சுட்டப்பட்டதனை ஒழித்து,
அதனினங் குறித்து நிற்கும்.
(வ-று.) ஆடை கொணர்ந்தவழி
யவ்வாடை வேண்டாதான் மற்றையது கொணாவெனும்.
அஃது
அச்சுட்டிய வாடை யொழித்து அதற்கு இனமாகிய
பிறவாடை குறித்தது. (10)
மற்று
653. மற்றென் கிளவி
வினைமாற் றசைநிலை.
(இ-ள்.) மற்றென்னும் இடைச்சொல்,
வினைமாற்றும், அசைநிலையுமாகிய இரண்டு
பொருளையுந் தரும்.
(வ-று.) ‘மற்றறிவா
நல்வினை’ (நாலடி-19) வினைமாற்று; அது மற்றவலம்,
(குறுந் -
12) அசைநிலை. (11)
எற்று
654. 1 எற்றென் கிளவி
யிறந்த பொருட்டே.
1. தொல் - சொல்: இடை - 15.
|