பக்கம் எண் :
 
சொல்லதிகாரம்181முத்துவீரியம்

(இ-ள்.) எற்றென்னும் இடைச்சொல் இறந்த பொருளைத் தரும்.

(வ-று.) எற்றெனுடம்பி னெழில் எனவரும். (12)

மன்ற

655. மன்றக் கிளவி தெளிவை விளக்கும்.

(இ-ள்.) மன்றவென்னும் இடைச்சொல் தெளிவுப் பொருண்மையைத் தரும்.

(வ-று.) ‘கடவுளாயினு’மாக மடவை மன்றவாழிய முருகே (நற்-34) எனவரும். (13)

தஞ்சம்

656. 1 தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே.

(இ-ள்.) தஞ்சமென்னுஞ் சொல் எளிமைப் பொருளைத் தரும்.

(வ-று.) ‘முரசுகெழு தாயத்தரசோ தஞ்சம்’ (புறம் - 73). (14)

அந்தில்

657. அந்திலாங் கசைநிலை இடப்பொரு ளவ்வே.

(இ-ள்.) அந்திலென்னும் இடைச்சொல்லும், ஆங்கென்பதும், அசைநிலைப்
பொருளையும் இடப்பொருளையும், தருவனவாம்.

(வ-று.) ‘அந்திற் கச்சினன் கழலினன் (அகம் - 76) அசைநிலை; சேயிழை யந்திற்
கொழுநற் காணிய (குறுந் - 293) இடம். (15)

கொல், எல்

658. கொல்லே யைய மெல்லே விளக்கம்.

(இ-ள்.) கொல்லென்னும் இடைச்சொல் ஐயப்பொருளையும், எல்லென்னும்
இடைச்சொல் விளக்கப் பொருளையுந் தரும்.

(வ-று.) குற்றிகொல், ஐயம்; எல்வளைத்தோளி, விளக்கம். (16)

1. தொல் - சொல், இடை - 18.