சொல்லதிகாரம் | 212 | முத்துவீரியம் |
‘எழுதுவரிக் கோலத்தார்’
என்னும் பாடல் பெண்ணிற்கும் நூலிற்கும்
பொருந்துவதாகும்.
வரிக்கோலம் - செவ்வரி,
கருவரியழகு; வரிவடிவம். தொகுதி - கூட்டம்.
தோடு -
இதழ்.
(116)
செய்யாய் என்னும்
முன்னிலை வினைச்சொல்
759. 1 செய்யா என்னும்
முன்னிலை வினைச்சொல்
செய்யென் கிளவி யாகிட
னுடைத்தே.
(இ-ள்.) செய்யாயென்னும்
வாய்பாட்டதாகிய முன்னிலை வினைச் சொல்,
ஆயென்னுமீறுகெடச் செய்யென்னுஞ் சொல்லாய்
நிற்றலு முடைத்தாம்.
(வ-று.) நடவாய், வாராய்,
உண்ணாய், தின்னாய் என்பன ஈறுகெட்டு-நட, வா, உண்,
தின், எனச் செய்யென் கிளவியாயினவாறு காண்க. (117)
முன்னிலை வினைக்கண்
வரும் ஈகாரமும் ஏகாரமும்
760. 2 முன்னிலை முன்ன ரீயு மேயும்
அந்நிலை மரபின்
மெய்யூர்ந்து வருமே.
(இ-ள்.) முன்னிலைவினைச்
சொல்முன் வரும் ஈகாரமும் ஏகாரமும் அம்முன்னிலைச்
சொற்கேற்ற மெய்யை ஏறிவரும்.
(வ-று.) ‘சென்றீபெரும
நிற்றகைக்குநர் யாரே’ (அகம் - 46); ‘அட்டி லோலை
தொட்டனை நின்மே’ (நற் - 300) எனவரும். (118)
முதல் இடைகடைக் குறை
761. ஒருமொழி மூவழிக்
குறைதலும் வரையார்.
(இ-ள்.) ஒருசொல் முதலினும்
இடையினும் கடையினும் குறைதலை நீக்கார்.
(வ-று.) மரை - ஓதி - நீல்.
(119)
மேலதற்கோர்
சிறப்புவிதி
762. குறைந்தன வாயினு
நிறைந்தன வாகும்.
(இ-ள்.)
அம்மூன்றுமொழியுங் குறைந்தனவாயினும்
நிறைந்தனவேயாம்.
1. தொல் - எச்ச - 54.
2. ,, ,, 55.
|