பக்கம் எண் :
 
சொல்லதிகாரம்213முத்துவீரியம்

(வ-று.) மரை - தாமரை; ஓதி - ஓந்தி; நீல் - நீலம். (120)

வேறுபடுக்கும் சொல்

763. 1 இடைச்சொல் லெல்லாம் வேற்றுமைச் சொல்லே.

(இ-ள்.) பிறிதோர் சொல்லை வேறுபடுப்பனவும், பிறிதோர் சொல்லான் வேறுபடுக்கப்
படுவனவும் எனச் சொல் இரு வகைப்படும். பிறிதோர்சொல்லை வேறுபடுத்தலாவது
விசேடித்தல்; பிறிதோர் சொல்லான் வேறுபடுக்கப்படுதலாவது விசேடிக்கப் படுதல்;
இடைச்சொல் லெல்லாம் பிறிதோர்சொல்லை விசேடிக்கும் மொழியாமென்க. (121)

இதுவுமது

764. 2 உரிச்சொன் மருங்கினு முரியவை யுரிய.

(இ-ள்.) உரிச்சொற்கண்ணும் வேறுபடுக்குஞ் சொல்லாதற்கு முரியனவுரியவாம்.
எல்லாம் ஆகாவாமெனவே உரிச்சொல்லுள் வேறுபடுத்தும் வேறுபடுக்கப்பட்டும்
இருநிலைமையும் உடையவாய் வருவனவே பெரும்பான்மை யென்பதாம்.

வேறுபடுக்குஞ் சொல்லேயாவன - உறு, தவ, நனி; இரு நிலைமையு முடையன -
குரு, கெழு, செல்லல், இன்னல் என்னுந் தொடக்கத்தன; உறுபொருள், தவப்பல,
நனிசெய்த்து என இவையொன்றனை விசேடித்தல்லது வாராமையும், குருமணி விளங்கு,
குருகேழ்கிள ரகலம், செங்கேழ், செல்லனோய், அருஞ்செல்லல், இன்னற்குறிப்பு,
பேரின்னல் என இவை ஒன்றை விசேடித்தும் விசேடிக்கப் பட்டும் இருநிலைமையு
முடையவாய் வருமாறும் காண்க. (122)

வினையெச்சம்

765. 2 வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய.

(இ-ள்.) மேற்கூறிய வினையெச்சமும் வேறுபட்ட பல இலக்கணத்தையுடையவாம்.

(வ-று.) ஞாயிறுபட்டுவந்தான்; ஓடிவந்தான்.

1. தொல் - எச்ச - 56.

2. ,, ,, 60.

3. ,, ,, 61.