பொருளதிகாரம் | 217 | முத்துவீரியம் |
ஐந்நிலத்திற்குரிய
இடம்
777. வரையே வனமே சுரமே
மருதந்
திரையே யவையவை சேர்தரு
மிடனே.
என்பது, மலையும்
மலையைச்சார்ந்த இடமும் குறிஞ்சியாம்; காடும் காட்டைச்சார்ந்த
இடமும் முல்லையாம்; பாலையும்
பாலையைச் சார்ந்த இடமும் சுரமாம்; வயலும்
வயலைச்சார்ந்த இடமும் மருதமாம்; கடலும்
கடலைச்சார்ந்த இடமும் நெய்தலாம்.
என்னை?
மாயோன் மேய காடுறை
யுலகமும்
சேயோன் மேய மைவரை
யுலகமும்
வேந்தன் மேய தீம்புன
லுலகமும்
வருணன் மேய பெருமண
லுலகமும்
முல்லை குறிஞ்சி மருத
நெய்தலெனச்
சொல்லிய முறையாற்
சொல்லவும் படுமே. (தொல்-அகம்-5)
என்றாராகலின். (9)
பொழுது
778. காலம் பருவம்
பொழுதிரு வகைப்படும்.
என்பது, பொழுது-காலமும்
பருவமும் என இரண்டு வகைப்படும், அவற்றைப்
பெரும்பொழுது சிறுபொழுது என்ப. (10)
பெரும்பொழுது
779. அவற்றுள்,
பருவங் காரே கூதிர்
முன்பனி
பின்பனி யிளவேனின்
முதுவேனி லாறே.
என்பது, முற்கூறியவற்றுள்,
பருவம் - கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில்
முதுவேனில் என்றவாறு. (11)
அதற்குரிய திங்கள்
780. அவைதாம்,
ஆவணி முதலா ஆடி யீறாக
இரண்டிரண் டாக வேற்கு
மென்ப.
|