எழுத்ததிகாரம் | 35 | முத்துவீரியம் |
(இ-ள்.) மொழி
பெயரெனவும், வினையெனவும் இருவகையாம். (5)
பெயர்
120. பொருளிடங் காலஞ் சினைகுணந்
தொழிலொடு
வருவது பெயரென வழுத்தப் படுமே.
(இ-ள்.) பொருள், இடம்,
காலம், சினை, குணம், தொழில் ஆகிய அறுவகையான்
வருவது பெயராகுமென்க.
(வ-று.) பொன்னன்,
பொருளால் வருபெயர், அகத்தன், இடத்தால்
வருபெயர்.
வேனிலான், காலத்தால் வருபெயர்.
மூக்கன், சினையால் வருபெயர், கரியன், குணத்தால்
வருபெயர். ஓதுவான், தொழிலால் வருபெயர்.
(வி-ரை.) பொருள், இடம்
காலம், சினை, குணம், தொழிலின் வருபெயர் (நன் - பத
- 5) என்பதற்கேற்ப அவ்வறுவகையான் வருவது பெயர் என்றார்.
(6)
வினை
121. வினைபல நிகழினும்
வினையெனப் படுமே.
(இ-ள்.) பலவாக வினைகள்
நடப்பினும் வினையாகுமென்க.
(வ-று.) நட, வா, மடி, சீ, விடு,
கூ, வே, வை, நொ, போ, வௌ, உரிஞ், உண்,
பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ், வாழ், கேள்,
அஃகு.
(வி-ரை.)
‘‘நடவா மடிசீ விடுகூ
வேவை
நொப்போ வௌவுரிஞ்
உண்பொருந் திரும்தின்
தேய்பார் செல்வவ்
வாழ்கேள் அஃகென்று
எய்திய விருபான் மூன்றா மீற்றவும்
செய்யென் னேவல்
வினைப்பகாப் பதமே’’
(நன் - பதவியல் - 10)
என்பர் நன்னூலார். (7)
பெயர்திணைபால்
இடங்கட்கு உரியதாமாறு
122. பெயரிரு திணையைம்
பான்மூ விடம்பெறும்.
(இ-ள்.) பெயர், உயர்திணை
அஃறிணையாகிய விருதிணையும், ஆண்பால் பெண்பால்
பலர்பால் ஒன்றன்பால் பலவின்
|